Sunday, November 8, 2009

விடை தெரியாத கேள்விகள்




சில நேரங்களில் நாம் பேசுவது ஒன்றாக இருக்கும், அதையே நாம் செய்வது ஒன்றாக இருக்கும். அது மாதிரியான விசயங்களில் ஒரு சில.

ஆணாதிக்க மனோபாவம் உடையவர்களை பற்றி எடுத்துகொள்வோம்.
- அவர்களிடம் சென்று அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என்று கேட்டால் , அம்மாதான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
- அவர்களுக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருந்தால் , தங்கை மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து இருப்பார்கள்.
- பருவ காலத்தில் , ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தும் இருப்பார்கள் ( அந்த பெண் மதிக்காத போது கூட ).
- அவர்களுக்கு திருமணம் ஆகியது என்றால் , மனைவி சொல்வதை மட்டும் கேட்டு கொண்டி இருப்பார்கள் (மற்றவர்களை மதிக்காமல் ).
- அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்றால் , அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அதன் மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்து இருப்பார்கள் , மகனை விட.
- அரசியலை எடுத்து கொண்டால், ஜெயலலிதா தான் அல்லது சோனியா காந்தி தான் என்று முழக்கம் இடுவார்கள்.

இவ்வளவும் செய்து கொண்டு, ஆண்தான் பெரியவன் ,பெண் அடிமையாகதான் இருக்க வேண்டும் என்று மார்தட்டி கொண்டு இருப்பார்கள். இது மாதிரியான ஆள்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் நடை முறை வாழ்கையில்.

இன்னும் சில பேர் இதற்கு அப்படியே எதிராக, பெண்ணடிமை கூடாது , ஆணாதிக்கம் தவறு என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கே திருமணம் நடக்கிறது என்று எடுத்து கொள்வோம். அவர்களை வீட்டோடு மாப்பிளை என்று கூறினால் , அவர்கள் திருமணம் செய்வார்களா என்று கேட்டால் ....."முடியாது" என்ற ஒரு சொல்தான் பதிலாக இருக்கும்.

அது என்ன......... திருமணத்தின் போது பெண் மட்டும்தான் , அவர்கள் சொந்த பந்தத்தை விட்டு வர வேண்டுமா? இதுவும் ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ , நமக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தானே?

இதற்கு என்னை நானே கேள்வி கேட்டு கொண்டால் , எனக்கும் பதில் சொல்ல தெரியவில்லை???????.

இது மாதிரியான முன்னுக்குபின் முரணான பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.....பதில்தான் தெரியவில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் , Ladies First என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று தான் நினைகிறேன். டாக்டர் ஷாலினி அவர்கள், அவருடைய புத்தகத்தில் கீழே உள்ளவாறு எழுதி இருப்பார். அதை படிக்கும் பொழுது அது உங்களுக்கு புரியும்

"கரு உருவாகும் போது , முதலில் அது பெண்ணாகத்தான் உருவாகுமாம்.. பின்பு க்ரோமோசோம்களின் மாற்றங்களினால் அது ஆணாக மாறும் அல்லது பெண்ணாகவே இருக்கும். ஆக முதலில் உருவாவது பெண் தான். ஆண் அல்ல. அதனால்தான் ஆணுக்கு உபயோகமே இல்லாமல் மார்பகங்கள் இருக்கிறதாம் ".