Wednesday, January 16, 2013

ரேபிஸ்டுகளின் ரேபிஸ்டுகள்

இந்த டெல்லி ரேப் மேட்டர  பத்தி யாருகிட பேசுனாலும் எல்லாரும் சொல்ற ஒரே பதில், இந்த பொண்ணுங்க டிரஸ் பண்ற விதம் அப்படி. இதுங்க ஒழுங்கா டிரஸ் பண்ணா இந்த பிரச்சினையே வராதுனுதான்.இது மாதிரி ஆளுங்கள பார்த்தா  எனக்கு எப்படி தோனுதுனா , "எனக்கு அந்த ரேப் மாதிரி சந்தர்ப்பம்  அமையல, வந்தா நானும் பண்ணுவேன். " அப்படின்னு சொல்ற  மாதிரி தோணுது. இது மாதிரி சொல்ற எல்லாமே அவர்களுக்கு  தெரிந்தோ தெரியாமலோ ரேபிச்ச்டுகளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சொல்ற மாதிரி "இவர்கள் அவர்களை விட ஆபத்தானவர்கள் " தான் போல.

கேட்டா எல்லாரும் என்ன சொல்லுவாங்கனா ,அது மாதிரி டிரஸ் பண்ணா டெம்ப்ட்  ஆகுது , அதனால ரேப் பண்றாங்கன்னு. எனக்கு என்ன கேட்க தோனுதுனா "டெம்ப்ட்  ஆனா ரேப் பன்னிருவின்களா?". தெரியாமதான் கேட்குறேன் , நாம எத பார்த்துதான் டெம்ப்ட் ஆகாம  இருக்கோம்?எல்லாத்துக்கும்தான்  டெம்ப்ட் ஆகுறோம்.அப்படின்னு பார்த்தா உணர்ச்சிகள் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா? பெண்களுக்கு இல்லையா? எத்தன ஆம்பளைங்க ரோட்ல முண்டா பனியனோட,லுங்கியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்கள பார்த்து பொண்ணுகளுக்கு டெம்ப்ட் ஆகாதா ? கண்டிப்பா ஆகும்...ஆனா அவங்க கண்ட்ரோல் பண்ணிக்கணும்.ஆனா ஆண்கள் கண்ட்ரோல்  பண்ணிகமாடாங்க. என்ன ஒரு ஆணாதிக்கம்?.ஆண்களுக்கு உள்ள அதே உணர்ச்சிகள் தான பெண்களுக்கும் இருக்கும்.

பெண்கள் ரோட்ல நடந்து போயிடு இருக்கும் போது , செயின் அறுத்துட்டு ஓடுறாங்க திருடனுங்க . அதுக்காக பெண்கள் வீட்ட விடு வெளிய வரும் போது நகைகள் எல்லாத்தையும் அவித்து வச்சிட்டுதான் வரணும் அப்படின்னு சொல்ல முடியுமா? திருடங்களுக்கு நகைய பார்த்தா டெம்ப்ட் ஆகும், அதுனால நகைய போடாதிங்கனு சொல்ல முடியுமா? வீடு புகுந்து இல்ல பேங்க் புகுந்து கொள்ளை அடிக்கிறாங்க...அதுனால பேங்க் நடத்தாதிங்கனு  சொல்ல முடியுமா? முடியாது . திருடர்கள் எல்லாம் சேர்ந்து இது மாதிரி  ஒரு அறிக்கை விடுறானுங்க " பெண்கள் நகைய போட்டுட்டு வரதுனாலதான் எங்களுக்கு டெம்ப்ட் ஆகுது.அதனால யாரும் நகை போடாம வெளிய வாங்க.நாங்க திருட மாட்டோம்னு" சொன்னா எப்படி இருக்குமோ அது மாதிரிதான் ரேப் விசயத்துக்கு நம்ம ஆளுங்க பேசுற விசயமும் எனக்கு தோணுது .

பர்தா போட்ட பெண்ணையே ரேப் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க . 5 வயது பொண்ணுங்கள கூட ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் நம்ம என்ன சொல்ல போறோம்? .....கண்டிப்பா பதில் இருக்காது . விட்டா பிறக்குற பெண் குழந்தைகள் கூட துணியோடதான் பிறக்கணும்னு ரூல்ஸ் கொண்டு வருவாங்க போல. கரெக்டுதான் ...அத பார்த்தும் நம்ம ஆளுங்க டெம்ப்ட் ஆகிடாங்கனா என்னா  பண்றது?

இது கூட பரவாயிலா...ஒருத்தர்கிட பேசிக்கிட்டு இருக்கும்போது சொல்றாரு...."சார்.....நாலு பசங்க நிக்கிற இடத்துல ஒரு பொண்ணு தனியா போனா , கைய பிடிச்சி இழுக்குறது மனித இயல்பு சார் " அப்படிங்கிறாரு. இத எப்ப மனித இயல்பா சேர்த்தாங்கன்னு  எனக்கு தெரியல?.அது உங்க பொண்ணா இருந்தா என்ன சார் பன்னுவிங்கன்னு திருப்பி கேட்டா பதில் இல்ல .

ஆக...நான் எப்படி இருக்கனும் , எப்படி டிரஸ் பண்ணனும்னு decide பண்றது நானாதான் இருக்கனும்.அடுதவங்களுகாக எல்லாம் யோசிச்சி என்னால பண்ணிக்கிட்டு இருக்க முடியாது ..அது  ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி .அது உடையிலும் பொருந்தும்.

பிரதீப்  

Sunday, June 10, 2012

ஆயிசா - பள்ளி கூடம் ஒரு பலி கூடம் ஆன கதை

ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய , எழுதி கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் ஒரு புத்தகத்தின் ஒரு முன்னுரைதான் இது. 10 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக பணி புரிந்தவரை , எது தமிழ் மொழி பெயர்தளை செய்ய தூண்டியது அதுவும் ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை என்பதுதான் அவர் சொல்லியது , நான் சொல்ல வருவது......

அப்போது அவர் , பூமி எப்படி ஒரு காந்தமாக செயல் படுகிறது என்பதை ஒரு வகுப்பில் எடுத்து கொண்டு இருந்துரிகிறார் எல்லா வருடமும் எடுப்பது போல,ஆனால் இந்த வகுப்பில் அவர் இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. 

" மிஸ்" ....
" என்ன வாந்தி வருதா ..வந்தா கிளம்பு "
"இல்ல மிஸ் ஒரு சந்தேகம்"

ஆச்சர்யம்....இருந்தாலும் காட்டி கொள்ளாமல் "என்ன" என்று கேட்க ..

" ஒரு காந்தத்தை ரெண்டாக வெட்டினால் என்ன ஆகும்" 

ரொம்ப இலகுவாக "ரெண்டு காந்தம் வரும்"..

"அந்த காந்தத்தை வெட்டிகிடே  போனா ...உதாரணமாக நமக்கு இந்த காந்தத்தை துண்டாகி கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா எண் என்று வெச்சிட்டா ?"

"ரொம்ப சிம்பிள்மா....முடிவுறா எண்ணிகையில் காந்தம் கிடைக்கும்"

அடுத்து என்ன கேட்பாளோ என்று பயந்து "உட்காரு" என்று சொல்லி விட்டு , ஏதேதோ நடத்தி விட்டு சென்று விட்டார் வகுப்பிலிருந்து.

இருந்தாலும் விடவில்லை அந்த மாணவி....."மிஸ் மிஸ்....காந்தத பத்தி இன்னும் ஒரு சந்தேகம் இருக்கும் மிஸ்...."

"என்னமா....டைம் ஆகிருசுல ....சீக்கிரம் சொல்லு ...."

"முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் ...எதிர் எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்  மிஸ்?"

"................"

"ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தொகை இழுக்கும்..ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டு இருக்கும் இல்லையா ...மிஸ் ?"

"ஆமா ...அதுகென்ன "

"என் சந்தேகம் அங்கனதான் இருக்கு.எல்லா காந்தங்களின் கவர்திறனும் ஒன்றென கொண்டால் அவை ஒட்டி கொள்ளத்தான் வாய்ப்பே இல்லையே. ..எப்புறமும் நகராமல் அப்படியேத்தான இருக்கும் .."  

".................."

"ஏன்நாம இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்தது போல் அமைக்க பட்டதா வசிக்க கூடாது ? அந்த கோணத்துல பூமிங்கிற காந்தத ஆராயலாம் இல்லையா ..."

பதிமூன்று வருட பள்ளி வாழ்கையில் இப்படிப்பட்ட கேள்வியை அவர் கேட்டதில்லை ....

"the truth of matnes.....வெற்றோட் ஸ்டுடென்ட்கிண்க்லீ எழுதியது...அருமையா  இருக்கு ..படிகிரிங்களா மிஸ் ..."

"உன் பேர் என்ன"

"ஆயிஷா".

அறை வாங்கியவள் போல் புத்தகத்தை வாங்கி கொண்டு ஆசிரியர் அறைக்குள் சென்று விட்டார்.

பின்பு அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் விசாரிக்கும் பொழுது ...அவள் இது மாதிரி  பல  கேள்விகள் மற்ற ஆசிரியர்களிடம் கேட்டு அடி வாங்குவாள்  என்றும்....தாய் தந்தை இல்லாததால் சித்தி வீட்டில் இருந்து படிக்கிறாள் என்றும் இந்த ஆசிரியர் தெரிந்து கொண்டார்...இது மாதிரி சில பல கேள்விகளினால் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இருந்த நட்பு கூடியது. இது மாதிரி ஒரு சந்திப்பில் ...இன்னொரு புத்தகத்தை எடுத்து கொடுத்து...இதை படித்தேன் மிஸ் ...ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில் இருபதினால் சரியாக புரிய வில்லை...நீங்கள் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்....செயிறிங்களா மிஸ் ? என்று கேட்க ...பாப்போம் என்று சொல்லி விட்டு....அடுத்த ஒரு கேள்வியை ஒரு கேட்டு இருக்கிறாள்..

"மிஸ் ....துணி துவைக்கும் போதும் அழுக்கு போது...உடம்புக்கு போடுற சோபுளையும் அழுக்கு போகுது....இத அதுக்கு போட்ட ஏன்னா....அத இதுக்கு போட்ட என்ன....."

"ஏண்டி இப்படியெல்லாம் கேட்டு ஏன் உயிரை வாங்குற" 

கேள்வி ஈசியாக இருந்தாலும்..பதில் தான் சரியாக வர வில்லை என்று நினைத்து கொண்டு சென்று விட்டார்.

இன்னொரு நாள் அழுது கொண்டே ஆசிரியரிடம் வந்து நிக்க ....என்ன என்று கேட்கும் பொழுது வரலாறு ஆசிரியர் அடித்து விட்டார் என்று கூறி இருக்கிறார்ள் .

" என்ன அப்படி கேட்ட?"

அவரிடம் இதான் மிஸ் கேட்டேன்....

"அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யாரு மிஸ் "

"புத்த பிச்சு "
"அவர் பெயர் என்ன மிஸ்"
"........."
"அவர் பெயர் உபகுப்தர் மிஸ்"

"தெரிஞ்சு வசிகிடே என்னைய கேட்டு அவமான படுதுரியா ?" என்று கேட்டு ...வெழு வெழு என்றுவெளுத்து விட்டார்.....

பின்பு  இந்த மிஸ்ஸிடம் ......

"அடி வாங்குனா வலிகாம  இருக்குறதுக்கு எதாச்சும் மருந்து இருக்கா  மிஸ்"  என்று அழுதுகிட்டே கேட்டு சென்று  விட்டாள்.

இப்படி பட்ட  வேளையில் தான் அந்த சோகம் நடந்து இருக்கிறது...

"மிஸ் ..உங்கள  ஆயிசா வேதியியல் லேபுக்கு வர சொல்றா  "..

"ஏன் அவ  இங்க வர மாட்டாளா"

"தெரியில    மிஸ் ...உங்கள வர சொன்னா "

சரி என்று அங்கு செல்ல..

"வாங்க மிஸ்....அடி வாங்குனா வலிகாம இருக்குறதுக்கு நான் ஒன்னு கண்டு  பிடிச்சி  இருக்கேன்  மிஸ் ..வந்து பாருங்க " 

"வேதியியல nitres oxide வந்து உடல்  மரத்து போறதுக்காக operation theatrela  பண்றாங்களாம் ...அதான் நான் இந்த தவளைக்கு  first போட்டேன்...அது அப்படியே இருக்கு மிஸ்....அதான் அடுத்து எனக்கு ஒரு ஊசி போட்டேன். "

" அடி பாவி என்னடி பண்ணி வச்சிருக்கே ....என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தவளை இறந்து போக  ...." இவளை ஹோச்பிடளுக்கு  அழைத்து  சென்று இருக்கிறார்கள் ...ஆனால் போகிற  வழியிலேயே  ஆயிசா உயிரை  விட்டு இருக்கிறாள் 

இந்த நிகழ்வு ஆசிரியருக்கு ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்த , இது போன்ற மற்ற ஆசியாகளுக்கு உபயோகமாக இருக்கட்டும் என இந்த தமிழ் மொழி பெர்யர்ப்பை இவர் கையில் எடுத்து இருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இவர் , தற்போது உள்ள கல்வி முறையையும் சாடி இருக்கிறார். 

"எண்கள் தான் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கின்றன. மதிப்பெண்கள்,வரிசை எண், தேர்வு எண். எங்கும் எண்கள் .எண்கள்தான் பள்ளியை ஆள்கின்றன.எல்லா ஆசிரியர்களும் ஒரு வகையில் மாணவர்களின் அறிவை அவமான படுத்தி கொண்டுதான் இருகிறார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியா ....? பள்ளி கூடங்கள் பலி கூடங்கள் ஆகி விட்டன. எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள் .அவற்றிற்கு ரெடிமேட் பதில்கள்.வெறும் மனப்பாடம் செய்யும் ஒரு இயந்திரமாய் மாணவர்கள் வளர்ந்து கொண்டு இருகிறார்கள்"


அவர் சொல்வதும் சரிதான். சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் இப்படி கூறி இருந்தார்." எனக்கு தெரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களும் , பிட் அடித்து அல்லது காபி அடித்து வெற்றி பெரும் மாணவர்களும் ஒன்றுதான் " ...எவ்வளவு உண்மை.

இன்று நீங்கள் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்றால் , புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் உண்டு..இல்லையேல் வாங்க முடியாது. ஆக எல்லா பள்ளிகளும் மனபாடம் செய்வதையே  மாணவர்களுக்கு போதிகின்றார்கள். சொந்த  சரக்கு மதிப்பு இல்லை இப்படி இருக்க  எந்த  பள்ளியில் குழந்தைகளை படிக்கச் வைத்தால் என்ன . இன்றும்  சில முக்கிய பள்ளிகளுக்கு கூட்டம் அலை மோதி வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறோம். இது மாதிரி படிப்தற்கு ஏன் வரிசையில் நின்று படிக்கச் வைக்க வேண்டும். சாதாரண பள்ளியில் படிக்கச் வைத்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது. 

உதாரணத்திற்கு என்னை எடுத்து கொண்டால் , நான் மேல்கல்வி முடித்து வெளியே வரும் பொழுது எனக்கு என்ன தெரியும் என்று யோசித்து பார்த்தால், தமிழ் , ஆங்கிலம் எழுத படிக்கச் தெரிந்ததை தவிர ஒன்றும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் ஆங்கிலம் சுத்தம். எழுத படிக்கச் தெரிந்ததை தவிர வேற சொந்தமாக பேச, எழுத தெரியாது. எவ்வளவு ஈசியான கதை என்றாலும் அதை மனபாடம் செய்து தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலையைத்தான் தமிழ் வழி கல்வி கற்று கொடுத்து இருக்கிறது.

ஆக ஆசிரியர் கூறுவது போல பள்ளி கூடம் ஒரு பலி கூடமாக ஆகாமல் , கண்டிப்பாக உயிர்தெழ வேண்டும்.பள்ளியில் பல மாற்றங்கள் வர வேண்டும் ,சொந்த சரக்குக்கு மதிப்பு இருக்க வேண்டும். அந்த சொந்த சரக்கை மதிப்பிடும் அளவிற்கு ஆசிரியர்களின் நிலையும் உயர வேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு விளையாட்டையும் ஒரு படிப்பாக  வைக்க  வேண்டும். அது   ஓரளவிற்கு  physical fitness m  வளர்க்கும்  விதமாக  இருக்கும் சமசீர்கல்வி ஒரு muthal padi. இன்னும்  வளர  வேண்டும். வளரும். :-)


Sunday, May 20, 2012

ஜாதியும் .....தோஷங்களும்

நபர் 1 : அந்த பொண்ண ஏன்டா வேணாம்னு சொல்லிட்ட?
 நபர் 2: அது sc பொண்ணுன ...அதான் வேணாம்னு சொல்லிட்டேன்


 ரோட்டில் கடந்து போகின்ற பொழுது கேட்ட உரையாடல் இது. திரும்பி கேட்க வேண்டும் என்று தோன்றியது " ஏன் sc பொண்ணுனா அவங்களுக்கு உணர்ச்சிகள் கிடையாதா அல்லது மேட்டர் இல்லையான்னு" . தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஏதாவது ஒரு தனிப்பட்ட தேவைக்காகவோ இன்னமும் இந்த ஜாதியை பிடித்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.வயதானவர்கள் இதை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் இன்றைய இள வயதினரும் இதை சொல்லி கொண்டு அலைவதுதான் வருத்தமான செய்தியாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கும் இள வயதிலிருந்தே ஜாதியை ஊற்றி வளர்த்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.


 இந்தியாவிலிருந்து நிலாவிற்கு மனிதனை அனுப்பினால் கூட ஜாதி ஒதுக்கீடு செய்துதான் இந்தியா அனுப்பும் என்று பலர் தங்களது வெறுப்பை காமித்து கொண்டு இருக்கிறார்கள். வரவேற்க தக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே வேளையில் இவர்களிடம் ,ஜாதி இல்லை என்று கூற சொல்லுங்கள். சொல்ல மாட்டார்கள். ஆக கீழே இருப்பவர்கள் கீழேயே இருக்க வேண்டும், மேலே வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இவர்களை எடுத்து கொள்ளலாம். கீழே உள்ளவர்கள் மேலே வர வேண்டும் என்பதின் ஒரு நோக்கம் தான் இந்த ஜாதி ஒதுக்கீடு.ஆக இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் ஜாதியும் இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்கும். அப்போது இவர்கள் ஜாதி ஒதுக்கீடை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும்.


ஜாதி, மதம் என்று நான் வேண்டாம் என்று சொன்னாலும் நானும் ஒரு வகையில் இதை வளர்ப்பதில் ஒரு மறைமுக ஒரு பங்கை எடுத்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நினைக்கிறன்.  அதாவது , ஒரு குழந்தை படித்து முடித்து எந்த துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் முடிவு எடுப்பதை விட அந்த மாணவன் தேர்ந்து எடுத்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை ஓரளவு நாம் ஒத்து கொள்கிறோம். அவன் துறையை தேர்ந்து எடுப்பதில் சரி. ஆனால், அவன் எந்த மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் அல்லது எடுக்க கூடாது  என்பதை நாம் அவனிடம் கேட்காமலே சிறு வயதிலேயே அவனுக்கு திரித்து விடுகிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு பாதிரியார் , திருமணம் செய்து வைக்கும் பொழுது உனக்கு சம்மதமா என்று இருவரிடமும் கேட்டு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பிறந்தவுடன் எடுக்கும் பப்டிசம் அவனுடைய  சம்மதத்தை கேட்காமலேயே அவனுக்கு நீ இந்த மதத்தைதான் நம்ப வேண்டும் என்று சொல்லி விடுகிறோம். இது எந்த விதத்தில் சரி? இது போன்று ஒவ்வொரு மதத்திலும் ஒரு சம்பிரிதாயம். இது சரியா என்பது கேள்விக்குறியே. சாதியற்ற , மதமற்ற ஒரு மனிதனை உருவாக்கி , அவன் பக்குவம் அடைந்த பிறகு அவனுடைய போக்கில் விட்டு , உனக்கு மதம் பிடித்தால் அதை பின்பற்று. இல்லை என்றால் மதமற்ற வாழ்கை வாழ் என்று கூறினால்.....அது சரி என்று தோன்றுகிறது. !!!!


 அது போல இந்த numerlogy காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. வர வர குழந்தை நமக்கு பிறகிறதா அல்லது numerlogy காரர்களுக்கு பிறகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கலர் அவர்களுக்கு ஒத்து போகும் , எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பதை கூட அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு வேலையும் இல்லை குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து. நண்பர் ஒருவர் புலம்பி கொண்டு இருந்தார், குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் வைக்க முடிய வில்லை. அந்த பெயர் வைக்க கூடாது என்று numerlogist சொல்லி விட்டார் என்று. சுத்த முட்டாள் தனமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ , பிறப்பிலேயே அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்க நாம் வழி செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. பெயரில் என்ன இருக்கிறது? நமக்கு ஒரு பெயர் பிடித்து விட்டால் கண்டிப்பாக வைத்து விட வேண்டும், அது எந்த மதத்தின் பெயராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி.


 இவர்கள் ஒரு பக்கம் என்றால், அடுத்தது இந்த ஜோசிய காரர்கள் தொல்லை. பிறந்த நேரத்தை வைத்து , குழந்தையின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று சொல்லி இவர்கள் படுத்தும் பாடு பெரும்பாடு. சமீபத்தில் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது. அது சிறிய மருத்துவமனை என்பதால் குழந்தை பிறக்கும் பொழுது அழுகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.சரி என்று என் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கும் பொழுது அதில் ஒரு நேரம் காட்டியது. என் அப்பா கடிகாரத்தில் ஒரு நேரம் காட்டியது. சரி இந்த இரண்டு நேரத்தில் எதை எடுத்து கொள்ளலாம் பிறந்த நேரமாக என்று யோசிக்கும் பொழுது நர்ஸ் வந்து ஒரு நேரத்தை சொன்னார். என்னவென்று பார்த்தல் மருத்துவமனையில் ஒரு நேரம் காட்டுகிறது. இதில் எந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ஜோசிய காரர்கள் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே கணித்தாலும் அது எந்த அளவுக்கு உண்மை ஆக போகிறது என்றும் தெரியவில்லை.




 அப்படியே சரியான குழந்தை பிறந்த நேரத்தை கணித்து விட்டாலும் , குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரியா என்றும் யோசிக்க வைக்கிறது.குழந்தை தாயின் வயிற்றிலும் உயிரோடுதான் இருக்கிறது. ஒரு உயிர் உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரி. ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.ஆக ஆணும் பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொன்னால் சரி.அது இல்லாமல் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது என்பது சரியான முறை அல்ல என்றே தோன்றுகிறது. ஆக ஜாதகம் பொய் என்பதே என்னுடைய கணிப்பு.




 இதிலும் இன்னொரும் விஷயம் இன்னும் காமெடி ஆகத்தான் இருக்கிறது. ஜாதகம் கணித்து குழந்தைக்கு செவ்வாய் தோஷம் , புதன் தோஷம் என்று சொல்வது. அப்படியே தோஷம் இருக்கிறது என்று சொன்னாலும் , அதற்கு பரிகாரம் செய்தால் சரி ஆகி விடும் என்பது. கோயிலுக்கு சென்று சில சம்பிருதாயங்கள் செய்தால் சரி ஆகி விடும் என்பதும், சில தோஷத்திற்கு இரண்டு கல்யாணம் நடக்கும், அதில் இரண்டாவதுதான் நிலைக்கும் என்றால் முதல் தாலி வாழை மரத்திற்கு கட்டி அதை வெட்டுவது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பரிகாரம் செய்து நாம் யாரை சந்தோஷ படுத்துகிறோம் , யாரை சந்தோஷ படுத்துவதினால் இந்த தோஷம் மறைகிறது. கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். நாம் முட்டாளா அல்லது பரிகாரம் செய்து நாம் சந்தோஷ படுத்துகின்ற அந்த கடவுளா அல்லது கோள்களா ? இந்த தோஷத்தில் உள்ளவர்கள், தோஷம் இல்லாதவர்களோடு இணைந்தால் இருவரில் யாரவது ஒருவர் இறந்து விடுவார் என்றெல்லாம் கேள்வி படுகிறோம். இந்த இணைவது என்பது திருமணம் செய்து இணையும் போதுதான் பலிக்குமா ? ஏனென்றால் எத்தனையோ பேர் விலை மாதர்களிடம் செல்கிறார்கள். அவர்களிடம் செல்லும் போது நாம் தோஷம், ஜாதகம் விசாரித்தா செல்கிறோம் ? அப்படி அவர்களிடம் இந்த தோஷம் இருந்தால் என்ன ஆகும்? அப்போது இதெல்லாம் "பலி"க்காதா ? தோஷம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கண்டிப்பாக ஏமாற்றுவேலைதான்.




 ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு குழந்தை ஒரு வீட்டில் பிறக்கிறது என்றால் ஒரு தோஷம் கண்டிப்பாக வரும்.அதை நான் ஏற்று கொள்கிறேன். அது சந்"தோசம்".

Monday, November 7, 2011

கடுப்பேதுராங்க மை லார்ட் !!!

7 ம் அறிவு படத்த பார்த்துட்டு பல பேரு பல கமெண்ட்ஸ் குடுத்துகிடுதான் இருக்காங்க. சில பேரு படம் சூப்பர் அப்படினும், சில பேரு படம் மொக்கனும், இன்னும் சில பேரு தமிழனு நினைக்கும் போது பெருமையாவும் இருக்குனு சொல்றாங்க. முருகதாஸ் இந்த படத்த பத்தி சொல்லும் போது, இந்த படத்த பார்த்துட்டு நீங்க தமிழனு நினைக்கும் போது ஒரு திமிரு இருக்கும்னு சொல்றாரு. ஆனால் எனக்கு என்ன தோனுதுனா, ஏன் இந்த இன வெறி? ஏன் இந்த மொழி வெறி?

மொழி ங்கிறது ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். தமிழ் மொழி பழமையானது, வரலாறு மிக்கது.சரி ஒத்துகிறேன்.ஆனால் அத சொல்லிகிட்டே இருக்குறதுனால, அந்த மொழி பேசுற நான் தமிழன் அப்படின்னு சொல்லிகிரதுல என்ன வந்துற போதுன்னு எனக்கு தெரியல. இதுல என்ன திமிரு இருக்கு இல்ல இதுல என்ன பெருமிதம் இருக்கு. ஜஸ்ட் அது ஒரு மொழி அவ்வளவுதான. தமிழ் மொழி பேசுரவந்தான் பெருமையான்வனு நினச்சா...பிறவியிலேயே வாய் பேச முடியாதவங்க, இல்ல பிறவியிலேயே காது கேட்காதவங்க,இல்ல மொழிந்கிரதையே உணர முடியாத நிலையில உள்ளவங்கள எப்படி நீங்க பார்குறிங்க? அவங்க வாழ்வதற்கு உரிமையே இல்லாதவங்களா? அவங்களுக்கு பாவம் மொழிந்கிறதே என்னனு தெரியாது....அவங்கல என்ன பண்ணலாம்? அவங்களுக்கு எல்லாம் திமிரே இருக்க கூடாதா?

எனக்கு என்னமோ இப்படிதான் எல்லாமே தொடர்கிரதொனு தோணுது...நீங்க மொழில தமிழ் மொழிதான் உயர்ந்தது அப்படின்னு சொல்றிங்க....உடனே இன்னொருத்தன் என்ன பண்ணுவான் அப்படினா ஜாதில ஏன் ஜாதி தான் உயர்ந்தது னு சொல்லுவான்..இன்னொருத்தன் மதத்துல என் மதந்தான் உயர்ந்ததுனு சொல்லுவான். அப்புறம் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.இது ஒரு பொழப்பா ?

சரி...அப்படியே தமிழ் , தமிழ் னு சொல்றவங்கனாசும் உண்மையா இருகிங்களா ..அதுவும் இல்ல....ஈழ தமிழர்களுக்கு நம்ம என்ன பண்ணிட்டோம்....அப்பப்ப சவுண்ட் கொடுப்போம்...சூடு ஆரிருசுனா மூடிகிட்டு இருப்போம்..இதுதான நடக்குது.....வேற எதாச்சும் இத மீறி நடந்துருச்சா....இல்ல இந்த படத்த எடுத்த முருகதாஸ் தான் உண்மையா இருக்காரா......தமிழ் படத்துல போதி தர்மர் தமிழர்னு சொல்றிங்க.....தெலுகு ல அவர வேற மாதிரி ப்ராஜெக்ட் பன்றிங்கனு சொல்றாங்க..இது தேவையா.....? தமிழ், தமிழ் னு சொல்றவரு என் ஹிந்தி ல போய் படம் எடுக்குரிங்க? தமிழ் மொழிலேயே எடுக்க வேண்டியதுதான....போதி தர்மர வச்சி , நாம தமிழர்னு பெரும படுறதா சொல்றிங்க....ஆனால் அந்த போதி தர்மர் தமிழருக்கு ஒன்னும் பண்ண மாதிரி தெரியல....அவர் என்னடானா சீனா நாட்டுக்கு போய் அங்க போய் எல்லாம் கத்து குடுத்துகிட்டு இருகாரு. எனக்கு என்னமோ அவர் கரெக்டாதான் இருக்குற மாதிரி தோணுது...நம்மதான் அவர தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்.

இதுலந்த ஒன்னும் மட்டும் புரியுது....தமிழரா நடித்துரிகுற சூர்யா வ சாகடிகுனும்னா விசத்த கலந்து கொடுத்தா காலி பண்ணிரலாம் போல...நானும் "நந்தா" படத்துழந்து பார்க்குறேன்...மனுசன இப்படியே சாகடிசிகிடு இருக்காங்க.

ஆக, இது மாதிரி தயவு செஞ்சு மக்களை உசுபேத்துரத நிறுத்துங்க சார்......நீங்க தூக்கி வச்சி ஆடுற தமிழ் இனத்துல முட்டாள் தனமா முடிவு எடுக்குற சில மக்கள் இருக்குறாங்க ..முத்து குமார் மாதிரி, சமீப காலத்துல தீகுளிச்சி இறந்து போன அந்த பொண்ணு மாதிரி....தேவ இல்லாம சில பேர நீங்களே உருவாகாதிங்க....


இது மாதிரி இந்தியா ல இன்னொரு கும்பல் செம்மைய கடுபேதிகிட்டு இருக்காங்க....யாருன்னு கேட்குரிங்கலா....அவர பத்தி ஒரு tag line குடுத்தா புரிஞ்சிரும்னு நினைக்கிறன்....."அவர் கொஞ்ச நாள் முன்னாடி சாப்பிடாம பேசிக்கிட்டு இருந்தாரு.....இப்ப பேசாம சாப்பிட்டுகிட்டு இருகாரு..." அவரேதான் அன்னா ஹசாரே தான்.மனுஷன் ஏதாவது ஒரு விரதம் எடுக்காம இருக்க மாட்டாரு போல..... இவரும், இவர் கும்பலுல இருக்குறவங்க சேட்ட தாங்க முடியல. இவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு வேற. ஒரு 5 பேர் சேந்துகிட்டு உண்ணாவிரதம் இருப்போம்னு அரசாங்கத்த மிரட்டுவான்கலாம், அதனால இவங்க சொல்றத கேட்கனுமா....என்ன நடக்குது இங்க....

ஊழல ஒழிக்கணும்னு சொல்றது எல்லாம் கரெக்டுதான்....ஆனால் அதற்கு ஒரு முறை னு ஒன்னு இருக்குல.....முதல ஒரு பொது நல வழக்கு போடுங்க...இது மாதிரி ஒரு சட்ட மசோதா கொண்டு வரணும்னு.....ஒத்துகலனா ..அதுக்கப்புறம் நீங்க உண்ணாவிரதம் இருங்க.....எதுவுமே பண்ண மாட்டிங்க.....ஆனால் நீங்க சொல்றத எல்லாம் கேட்கனும்னா எப்படி ? தமிழ் நாடுலயும்தான் சமசீர் கல்வி கொண்டு வர கூடாதுன்னு சொன்னங்க....இங்க உள்ளவங்க எல்லாம் உண்ணா விரதமா இருந்தாங்க?....பொது நல வழக்கு போட்டாங்க...அவங்களுக்கு தீர்ப்பு கிடச்சது....இப்ப சமசீர் கல்வி தமிழ் நாட்டுல இருக்கு...இது மாதிரி இந்த கும்பல் எதுவுமே பண்ணல.....ஆனால் இவங்க சொல்றத கேட்கணும்.....அது எப்படி?

பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு.....எந்த ஊழல் சட்டம் கொண்டு வந்து ராஜா, கனிமொழி எல்லாம் சிறையில இருக்காங்கனு? ஆக சட்டம் எல்லாம் கரெக்டான் இருக்கு.....அரசாங்கம்தான் சரியா இருக்கனும்.....அத மாத்துறதுக்கு நீங்க பிரசாரம் பண்ணுங்க....இல்ல நீங்களே நல்ல ஆளுங்கள தேர்வு பண்ணி தேர்தலுல நில்லுங்க....அத விட்டு நீங்க கடந்த தேர்தலுல பிஜேபி ஓட்டு போடுங்கனு சொல்றது சரியா படலையே சார்? பிஜேபி என்ன அவ்வளவு நல்ல கட்சியா? மத வெறி பிடிச்சி பாபர் மசூதிய இடிகிரதுகு ஆழ கூட்டிட்டு போய் அத இடிச்சி, அத தலைமை தாங்கி நடத்திய அத்வானிக்கு ஆதரவு தர சொல்றது எந்த விதத்துல நியாயம் அப்படின்னு தெரியல ?

சரி அந்த கும்பலுல ஒருத்தரா இருக்குற....கிரண் பே(கே)டி மேல இப்ப சுமத்துன குற்றத பார்த்தா இன்னும் கேவலமா இருக்கு....விமான சீட்டுல கொடுத்த காசுல காச அடிச்சிட்டு....அத நான் use பண்ணல...என்னோட டிரஸ்ட் க்கு தான் use பண்ணேன்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்..? வடிவேலு சொன்னதுதான் நியாபகம் வருது....."ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" அது மாதிரி "மத்தவங்க பண்ணா ஊழல்...நீங்க பண்ணுனா பொது நலமா?" என்ன லாஜிக் இதுன்னு புரியல.....இந்த கும்பலுக்கு இந்தியா முழுவதும் எப்படி ஆதரவு தந்தாங்கனுதான் புரியல.....ஆனால் அந்த விசயத்துல அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். ..

Saturday, August 6, 2011

திலீபன் - ஒரு சகாப்தம் !!!





எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனது 25 வது வயதில் கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் நின்று, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை எதிர்த்து போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று அனைவராலும் கவனிக்க பட்டார்.அவர் பெயர் இராமச்சந்திரன்.Lawyer ஆக திருச்சியில் தற்போது பணியாற்றி கொண்டு இருக்கிறார். கவுன்சிலராக தேர்தலில் நிற்பது என்பது சாதாரண விசயமாக இருந்தாலும் தன்னுடைய 25 வயதில் அந்த பதவிக்கு நிற்க வேண்டும் என்று தோன்றியதும், அதற்காக உழைத்து கணிசமான வாக்குகளை பெற்றதும் என்னை பொறுத்த வரையில் ஒரு சாதனையே. அதை அவரிடம் நேராக கூறியும் இருக்கிறேன். எனக்கு தற்போது 29 வயது. 4 வருடங்களுக்கு முன்பு என்னால் அது மாதிரி யோசிக்க முடிந்ததா என்று யோசிக்கும் பொழுது, இல்லை என்கிற பதிலே எனக்கு தோன்றுகிறது. அப்படியே நின்றாலும் அந்த சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடிகின்ற அளவுக்கு எனக்கு மனபக்குவம் இருந்திருக்குமா என்றாலும், இல்லை என்றே தோன்றுகிறது. ஆக அந்த இளம் வயதில் அவர் அதை அசால்டாக எதிர்கொண்டது ஒரு சாதனையே.

எனக்கு தெரிந்து வரலாற்றில் இளம் வயதில் தன் வயதையும் மீறி சாதித்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் சில பேர். பாரதியார், பகத் சிங்க், சேகுவாரா. ஆரிய குலத்தில் பிறந்து ஜாதி இல்லை என்று அந்த காலத்திலே கூறி, தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தவர் பாரதியார் . " இது என்ன சந்தோசம், என் பெண் கல்யாண வயதில் ஒரு கீழ் ஜாதி பையனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் அதுதான் எனக்கு மிக பெரிய சந்தோசம்" என்று கூறியவர். ஆனால் தன்னுடைய 39 வயதில் நோய்வாய் பட்டு இறந்து விட்டார். பகத் சிங்க், தன்னுடைய 24 வது வயதில் சுதந்திர போராட்டத்திற்காக தூக்கில் ஏறிய மாவீரன். சேகுவாரா, மக்கள் எந்த ஒரு நாட்டின் மூலையில் ஒடுக்க பட்டாலும் , அதற்காக போராடுவேன் என்று கூறி , கியூபா புரட்சியில் போராடி வெற்றியை வாங்கி தந்து , அந்த நாட்டில் கிடைத்த உயர் அமைச்சர் பதவியை துறந்து , இன்னொரு புரட்சியில் தன்னுடைய 39 வயதில் உயிர் துறந்த வீரன்.

இந்த மாவீரர்களின் வரிசையில் இருபவர்தான் திலீபன். யார் இந்த திலீபன் ? - விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவனாக இருந்து, இந்திய அரசிடம் தன்னுடைய 5 அம்ச கோரிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , இந்திய அரசு இவருடைய கோரிக்கைகளை ஏற்காத காரணத்தினால் , உண்ணாவிரதத்தின் 12 வது நாள் முடிவில் தன்னுடைய 24 வது வயதில் உயிரை தமிழ் ஈழ மக்களுக்காக துறந்த ஒரு வீரன்தான் திலீபன். வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய " தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்" என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது இவரை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு திலீபன் என்பவர் விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்த தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பின்பு இவரை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாஞ்சிநாதன் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தின் 12 நாட்களும் திலீபனுடன் கூட இருந்து , திலீபனின் உயிர் அணு அணுவாக அவர் உடலை விட்டு பிரிவதை நேரில் கண்டவர்.

உண்ணாவிரதம் இருப்பது என்பது ஒரு விசயமாக இருந்தாலும், தன்னுடைய 24 வயதில் 5 அம்ச கோரிக்கைகளுக்காக மன உறுதியுடன் இருந்து உயிரை இழப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. அதுவும் 24 வயதில் எங்கிருந்து இவருக்கு இவ்வளவு மன உறுதியும் , மன பக்குவமும் வந்தது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமான ஒரு விசயமாகவே படுகிறது. பிரபாகரன் அவர்கள் இந்த இளம் வயதில் இவருக்கு அரசியல் பிரிவு தலைவர் பதவியை அளித்திருகிறார் என்றால் இவருடைய தனி தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தில், இவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். திலீபன் இந்த அற போராட்டத்திற்கு முன்பு , போரில் ஈடுபட்டு தன்னுடைய குடலில் 12 அங்குலத்தை இழந்தவர் என்பதும், ஒரு முறை சிங்கள படையினர் இவரை சூழ்ந்து , கைது செய்யும் பொழுது தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதையும் கூறும் பொழுது இவருடைய மன உறுதி, மன பக்குவம், ஆபத்து வரும் பொழுது அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்கிற மன முதிர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

"உண்ணாவிரதம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன்பு உண்ணாவிரதம் என்று கூறி இருந்தவர்கள் எல்லாம் , அவ்வபொழுது தண்ணீர் குடிபார்களாம். காந்தி அடிகளும் இதற்கு விதி விலக்கல்ல, அவரும் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிபாராம். திலீபனிடம் உடல் மோசமாக இருந்த சமயத்தில், இதை கூறி தண்ணீர் குடிக்க சொன்ன பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் " தண்ணீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். அப்படி இருந்து மக்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் தண்ணீரும் இல்லாமல் இருபதுதான் என்று கூறி தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தவர்தான் திலீபன்". அதுமட்டும் அல்லாமல் , உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு முன்பாக வாஞ்சிநாதன் அவர்களிடம் , 5 நாட்கள் கழித்து ஒரு வேலை நான் சுயநினைவு இல்லாமல் போகும் சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் எனக்கு மருத்துவ உதவி செய்ய கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம்.

இதை எல்லாம் பார்த்து, சற்று நம்முடைய மன பக்குவத்தை எண்ணி பார்த்தல் , யோசிக்க வேண்டிய விசயாமகவே உள்ளது. நாம் காலேஜ் படிக்கும் பொழுது , பள்ளியில் நாம் நடந்து கொண்ட முறையை யோசித்து பார்க்கும் பொழுது சிரிப்பாகவும் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த நாட்களில் , காலேஜ் நாட்களில் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. இன்னமும் 5 வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்த நாட்களை யோசித்து பார்த்தால், இவ்வளவு மோசாமாக நாம் இருந்தோமா, நமக்கு மன பக்குவம் இவ்வளவுதான் இருந்ததா என்று நினைக்க தோன்றுகிறது. எப்போதுதான் நாம் திறம் பட முடிவுகளை எடுப்போம்? எப்போது நாம் எடுக்கின்ற முடிவுகள் 5 வருடம் கழித்து யோசித்து பார்க்கும் பொழுது சரி என்று படுகிறதோ அப்போதுதான் நாம் ஓரளவு மனபக்குவதொடுதான் இருக்கிறோம் என்று நம்மை நாமே யூகிக்க முடியும் என்று நினைக்கிறன்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, 24 வயதில் கொள்கைக்காக உயிர் நீத்த திலீபன் ஒரு சகாப்தமே !!!!

இந்த புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பன் வாசுவுக்கு நன்றி :)

Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வி = சமம் இல்லா கல்வி !!!

இப்பொழுது ஆங்காங்கே அனைவராலும் பேசப்படும் , விமர்சிக்க படும் ஒரு செய்தி சமச்சீர் கல்வி. உண்மையில் இது தேவைதானா என்று கேட்கும் பொழுது கண்டிப்பாக தேவையான ஒன்றே. ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தையை கல்வியில் இருந்தும் ஒழிப்பதற்கு முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் முறை கண்டிப்பாக வரவேற்க தக்கதே.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பாட முறையை பயில வேண்டும் என்பது சரியான ஒன்றே. ஆனால் உண்மையில் இந்த முறையை செயல்படுத்துவதால் எந்த அளவு மாற்றம் இங்கு ஏற்படும் என்று யோசித்து பார்த்தால், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட போவது இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.

முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.

இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.

தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.

ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.

எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!

Sunday, May 8, 2011

சும்மா...................... டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சென்ற வாரம் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது ஒரு போஸ்டரை பார்த்தேன்...புனித நீராட்டு விழா என்று கூறி அந்த பெண்ணின் போட்டோ வையும் போட்டு இருந்தார்கள்....பார்பதற்கு சற்று வியப்பாகவும், அந்த சிறு பெண்ணை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது....இன்னமும் இது போன்ற கேவலமான சம்பிருதாயங்கள் நமக்கு தேவைதானா என்று....இது ஒரு பெண்ணிற்கு தேவைதான் என்று கூறி 1000 காரணங்கள் கூறினாலும், இந்த காலத்திற்கு இது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக வீட்டில் வைத்து செய்வதை செய்து விட்டு முடித்து கொண்டால் போதுமானது என்றே தோன்றுகிறது. இதை பற்றி ஒரு தெரிந்த நபரிடம் விவாதித்த போது, ஒரு பெண் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பால், ஆகவே செய்து விடுவது நல்லது என்று கூறினார். இப்படி இது போல ஒரு பெண் வளர்ந்த பிறகு எதிர் பார்த்தால் என்றால், நாம் அந்த பெண்ணை சரியான முறையில் வளர்க்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.

இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.

சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.