வெற்றி ---- இந்த வார்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.
:)))))
"Success is just like being pregnant: everybody congratulates you, but nobody knows how many times you were fucked." - Gurnicht Von Nicht (1946-).
Thursday, September 24, 2009
Sunday, September 13, 2009
நானும் ஒருவன்

கீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.
தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.
ஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.
கல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண்டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.
தென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.
அழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.
ஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.
எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.
கடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.
நமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.
ப.பிரதீப்
Sunday, August 23, 2009
உங்களுடைய ரத்த பிரிவை அறிந்து கொள்ள போகிறிர்களா --- உஷார்

சமீபத்தில் ரத்த பரிசோதனை செய்த பொழுது ஏற்பட்ட அனுபவம் எனக்கு மற்றும் என்னுடைய நண்பருக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து என்றே கூற வேண்டும்.
மூன்று மாதத்திற்குள் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று நினைத்து சென்னையில் உள்ள பெரிய மருத்துவ நிலையத்திற்கு சென்று பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து அதனுடைய விவரத்தை பார்த்த பொழுது சற்று அதிர்ச்சியாக மற்றும் சந்தேகமாக இருந்தது. என்னுடைய ரத்த பிரிவு A2B +ve (முன்பே தெரியும்). அங்கு அவர்கள் கொடுத்தது AB+ve.
சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்க்காக பரிசோதனை செய்த மருத்துவரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் நாங்கள் இப்படிதான் செய்வோம். 1 அல்லது 2 போன்ற உட்பிரிவுகள் எல்லாம் குறிப்பிடுவதில்லை என்று கூறினார். எண்ணை குறிபிடுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டதிற்கு சரியான பதில் ஒன்றும் அவரிடம் இருந்து வராத காரணத்தினால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு சிறு பரிசோதனை கூடத்திற்கு சென்று ரத்தத்தை கொடுத்தேன். அவர் பார்த்த மாத்திரத்தில் இது B+ve என்று கூறி விட்டார். அதிர்ச்சியோ அதிர்ச்சி (எனக்கும் , என் நண்பருக்கும்).
"சார், நல்ல பார்த்து சொல்லுங்க......ஒன்னும் அவசரம் இல்ல....இப்பதான் இன்னொரு இடத்துல இன்னொரு பிரிவ சொன்னாங்க....நீங்க ஒன்னு சொல்றீங்க.... நல்ல டைம் எடுத்துகோங்க.... அப்புறம் சொல்லுங்க " என்று கூறிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது அவர் விடாபிடியாக உங்களுக்கு இதுதான் B+ve என்று கூறி விட்டார். சந்தேகம் இருந்தால் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி பரிசோதனை செய்த ரத்தம் பதிந்த அந்த கண்ணாடியை என்னிடம் காண்பித்தார்,
" இப்படி பார்க்க தெரிஞ்சா நான் என் உங்கிட்ட வரேன் என்று சொல்லி விட்டு " அங்கிருந்து கிளம்பி விட்டோம். (திரைப்பட சென்சார் பிரிவில் இருந்தாரோ என்னமோ தெரியவில்லை A வை கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்து விட்டார். இதில் எது நடந்தாலும் ஏற்று கொள்ளுங்கள் என்று உணர்த்த விரும்பினாரோ தெரியவில்லை , B+ve என்று கூறி சென்று விட்டார்.)
" என்னதாண்டா நம்முடைய உண்மையான ரத்த பிரிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அன்றே பெரிய நிறுவனம் வைத்துள்ள ஒரு ஆய்வு கூடம் மற்றும் இன்னொரு நிறுவனத்தில் சென்று ஆய்வு செய்த பொழுதுதான் என்னுடைய உண்மையான ரத்த பிரிவையே அறிந்து கொள்ள முடிந்தது. (A2B+ve)".
இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்றால் , என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்திற்காக ரத்த கொடுக்க சென்று இருக்கிறார். அவருக்கு பரிசோதனை செய்து விட்டு உங்களுக்கு மஞ்சள்காமாலை உள்ளது என்று சொல்லி விட்டனர். அவருக்கு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இன்னொரு பெரிய நிறுவனத்தில் சென்று பார்த்த பொழுது ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டனராம். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மேலும் ஒரு நிறுவனத்தில் சென்று ரத்தத்தை கொடுத்து விட்டு முடிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
மருத்துவத்தில் மிக மிக சாதரணமாக கண்டுபிடிக்க கூடிய ரத்த பிரிவை தெரிந்து கொள்ள இவ்வளவு அவஸ்தை பட வேண்டுமா என்ன? இது பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்த பொழுது மேலோட்டமான பரிசோதனையில் ரத்த பிரிவை அறிந்து கொள்ள முடியும். இன்னும் சில பரிசோதனைகள் செய்யும் பொழுது உட்பிரிவு இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். பல ஆய்வு கூடங்களில் இது போன்ற உட்பிரிவுகள் செய்வதில்லை என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார்.
பணத்திற்காக சில பேர், உங்களுக்கு ரத்தத்தில் அந்த பிரச்சினை உள்ளது, இந்த பிரச்சினை உள்ளது என்று கூறியும் பணத்தை பிடுங்குவதாகவும் கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த சமூகம் திருந்த போவதும் இல்லை.
மனிதனுக்கு மிக முக்கியமான ரத்த பிரிவை தெரிந்து கொள்வதில் இவ்வளவு பிரச்சினை என்றால் என்ன சொல்வதென்று தெரியவில்ல தமிழ்நாடு நிலைமையை...?
ப.பிரதீப்
Sunday, August 2, 2009
அறிவு ஜீவிகளின் ஆடி மாதம்

ஆடி மாதம் - இந்த மாதத்தை பற்றி பொதுவாக சில கருத்துகள் அந்த காலத்திலிருந்து நிலவி கொண்டுதான் இருக்கின்றன. ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதுதான் அது.
இந்த கருத்து தேவைதானா? என்று ஆராயும் பொழுது தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது எனக்கு. அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னார்கள் என்றால், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் , சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சொல்வது ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
ஆனால் இந்த காலத்தில் அது சரிதானா என்று சொன்னால் , வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அந்த காலத்தில் , காற்றாடி , குளிர் சாதன பெட்டி போன்ற வாய்புகள் இல்லை . ஆகையால் அது சரி. ஆனால் இந்த காலத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. நம்மை எந்த அளவிற்கு, நம்மை கூலாக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் கூடி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்றும் இதை காரணமாக கூறி கொண்டு திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த கூத்து என்றால் , ஆந்திராவிம் ஒரு பகுதியில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று மாமியார்கள் இருவரும் பார்த்து கொள்ள கூடாதாம், அது மாதிரியே மருமகளும் , மாமியாரும் பார்த்து கொள்ள கூடாதாம். நம்பகமான நண்பர் ஒருவரிடமிருந்து வந்த செய்தி அது. என்னவென்று சொல்வதென்று தெரிய வில்லை இந்த கூத்தை.
திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை ஆடி மாதத்தில்.
உதாரணமாக , புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ண கூடாது போன்றெல்லாம் சொல்லி கொண்டு இன்னும் நடை முறை படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும் , ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.
அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
ஆனால் நம்முடைய ஆள்கள் மிகவும் தெளிவானர்கள் , ஆடி மாதத்தில் ஒன்றும் விளங்காது என்று சொல்லி வைத்து ஊரை ஏமாற்றி , ஆடி தள்ளுபடியில் வாங்கும் பொருளை மட்டும் வலுவாக வாங்கி கொள்கிறார்கள். அது மட்டும் விளங்குமா என்று தெரியவில்லை.
இப்படி மக்கள் இருபது ஒரு வகையில் நல்லதாகவே பட்டது. நான் ஒரு வீடு பார்க்க வேண்டும் வாடகைக்கு என்று நினைத்து தேர்ந்து எடுத்த மாதம் இந்த மாதம்தான். காலியான வீட்டில் யாரும் குடியேற வில்லை. ஆகையால் பொறுமையாக முடிவு செய்து வீட்டை தேர்ந்து எடுத்தேன். எந்த வித போட்டியும் இல்லாமல்.
ஆடி மாதம் வாழ்க. அறியாமையில் வாழும் மக்கள் வாழ்க.
எல்லா மாதத்திற்கும் இது போன்று பெரியவர்கள் சொல்லி வைத்து இருந்தால் நல்லதாக இருக்குமோ என்று இப்போது உரைக்கிறது எனக்கு.
ப.பிரதீப்
Sunday, April 26, 2009
1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.
அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).
பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.
பின்பு நடந்ததுதான் காமெடியே.
அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)
இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?
இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.
அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.
நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.
*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.
*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.
*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter
*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.
*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.
இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.
ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.
ப.பிரதீப்
Tuesday, April 14, 2009
"விரோதி" தமிழ் வருட பிறப்பும், அம்பேத்கர் பிறந்த நாளும்
இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்ற பொழுதும் , காலையிலிருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன காரணமோ தெரிய வில்லை யாரும் அம்பேத்கர் பிறந்த நாளை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை.
காலையில் நண்பர் ஒருவரிடம் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தது. நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அவர் "இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு. நமக்கு இல்லை " என்று கூறினர். திரும்ப பதில் அளிக்க மனம் இல்லாத நிலையில் நிறுத்தி விட்டேன் பதில் அளிப்பதை.
இந்த மாற்றத்தை மக்கள் ஏற்று கொள்ளாததற்கு காரணம் அவர் தலித் என்பதாக கூட இருக்கலாம். இதே இன்று ஒரு வேறு ஒரு ஜாதி தலைவர் பிறந்த நாள் என்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறன்.எது எப்படியோ, இன்று வாழ்த்துக்குள் கூறி கொண்டாலும் , இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் கழித்து கண்டிப்பாக இது அம்பேத்கர் பிறந்த நாளாக மட்டும் கொண்டாட படும் என்பது மாற்ற மடியாது உண்மை. மாறும்.
இதில் பெரிய கொடுமை , அவருடைய இனத்தை சார்ந்தவர்களே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பதுதான். " வேறு என்ன சொல்ல 'அறியாமை' ". இந்த அறியாமை இருப்பதால்தான் தலித் இனம் இன்னும் அப்படியே இருந்து கொண்டு இருக்கிறது.
நண்பர் ஒருவரிடம் இதை பற்றி விவாதித்த பொழுது , அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று மற்ற பண்டிகையை போல் நன்றாக கொண்டாட படுகிறதாம். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அன்றே அவர்கள் அம்பேத்கர் சிலை எங்கு இருக்கிறதோ அங்கு சென்று மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கலாம். இன்று அவர்கள் உடுத்தும் உடை வெள்ளை. பின்பு அவர்கள் மேடை கூட்டமிட்டு அவருடைய புகழை எடுத்து உரைபார்கலாம்.
இந்த மாற்றத்தை அங்குள்ள இந்து பழம்பெருமைவாதிகள் ஏற்று கொள்ள முடியாமல் திட்டமிட்டு சில காரியத்தை செய்ததாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14.
இறந்த நாள் -- டிசெம்பெர் 6.
இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.
தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது. இந்த நோக்கில்தான் அவர் மாற்றினார் என்றால் இது வரவேற்கத்தக்கது. தமிழ் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றினால் இங்கு உள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
இப்படி இருக்க , ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறகும் பொழுது ஒரு பெயரை வைத்து அழைக்கும் பழக்கம் இங்கு உண்டு. அது போல இந்த வருடம் "இந்தபுத்தாண்டுக்கு பெயர் "விரோதி". சரியாகத்தான் அமைந்திருக்கிறது என்று நினைகிறேன் இந்த புத்தாண்டை மாற்றியது பல பேருக்கு விரோதத்தைதான் ஏற்படுத்துகிறது.
"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.
காலையில் நண்பர் ஒருவரிடம் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தது. நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அவர் "இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு. நமக்கு இல்லை " என்று கூறினர். திரும்ப பதில் அளிக்க மனம் இல்லாத நிலையில் நிறுத்தி விட்டேன் பதில் அளிப்பதை.
இந்த மாற்றத்தை மக்கள் ஏற்று கொள்ளாததற்கு காரணம் அவர் தலித் என்பதாக கூட இருக்கலாம். இதே இன்று ஒரு வேறு ஒரு ஜாதி தலைவர் பிறந்த நாள் என்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறன்.எது எப்படியோ, இன்று வாழ்த்துக்குள் கூறி கொண்டாலும் , இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் கழித்து கண்டிப்பாக இது அம்பேத்கர் பிறந்த நாளாக மட்டும் கொண்டாட படும் என்பது மாற்ற மடியாது உண்மை. மாறும்.
இதில் பெரிய கொடுமை , அவருடைய இனத்தை சார்ந்தவர்களே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பதுதான். " வேறு என்ன சொல்ல 'அறியாமை' ". இந்த அறியாமை இருப்பதால்தான் தலித் இனம் இன்னும் அப்படியே இருந்து கொண்டு இருக்கிறது.
நண்பர் ஒருவரிடம் இதை பற்றி விவாதித்த பொழுது , அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று மற்ற பண்டிகையை போல் நன்றாக கொண்டாட படுகிறதாம். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அன்றே அவர்கள் அம்பேத்கர் சிலை எங்கு இருக்கிறதோ அங்கு சென்று மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கலாம். இன்று அவர்கள் உடுத்தும் உடை வெள்ளை. பின்பு அவர்கள் மேடை கூட்டமிட்டு அவருடைய புகழை எடுத்து உரைபார்கலாம்.
இந்த மாற்றத்தை அங்குள்ள இந்து பழம்பெருமைவாதிகள் ஏற்று கொள்ள முடியாமல் திட்டமிட்டு சில காரியத்தை செய்ததாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14.
இறந்த நாள் -- டிசெம்பெர் 6.
இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.
தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது. இந்த நோக்கில்தான் அவர் மாற்றினார் என்றால் இது வரவேற்கத்தக்கது. தமிழ் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றினால் இங்கு உள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
இப்படி இருக்க , ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறகும் பொழுது ஒரு பெயரை வைத்து அழைக்கும் பழக்கம் இங்கு உண்டு. அது போல இந்த வருடம் "இந்தபுத்தாண்டுக்கு பெயர் "விரோதி". சரியாகத்தான் அமைந்திருக்கிறது என்று நினைகிறேன் இந்த புத்தாண்டை மாற்றியது பல பேருக்கு விரோதத்தைதான் ஏற்படுத்துகிறது.
"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.
Sunday, April 5, 2009
தடுமாறும் தாம்பத்யம்
சில நாட்களுக்கு முன்பு , நண்பர் ஒருவரிடம் உரையாடி கொண்டிருந்த பொழுது அவருடைய தங்கையை பற்றி வருத்தத்துடன் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய தங்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் , பின்பு சில நாட்களிலேயே மனவருத்தம் ஏற்பட்டு இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டதாகவும், காரணம் சரியாக தெரிய வில்லை என்றும் கூறினார்.
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே , இன்னொரு நண்பரும் என்னுடைய தங்கைக்கும் இதுமாதிரிதான் , அவரும் இப்பொழுது எங்கள் வீட்டில்தான் உள்ளார் என்று கூறினார்.
பின்பு தீர விசாரித்த பொழுது , இவருக்கும் உள்ள பிரச்சினை பொதுத்தான் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் தாம்பத்யம் நடக்கவில்லை என்பதுதான் அது.
பொதுவாகவே இது மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலருக்கு தாம்பத்யம் நடக்கவில்லை என்றும், இன்னும் சிலருக்கு ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விஷயம் சற்று விஸ்வரூபம் எடுத்து விவாகரத்து வரையிலும் சென்று உள்ளன. மனோதத்துவ நிபுணர்களுக்கு வரும் பெரும்பாலான சந்திப்புகள் இதனுடன் சம்பந்த பட்டே வருகின்றன. பின்பு அவர்கள் கூறும் சிகிச்சைக்கு உட்பட்டு குணமாகி பின்பு குழந்தை பேறு உண்டாகி சந்தோசமாக வாழ்கை சென்றதாக கூறும் சம்பவங்களும் இங்கு உண்டு.
மேலே கூறிய விசயங்களை பார்க்கும் பொழுது , என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.
திருமணத்திற்கு முன்பு அனைத்து விசயங்களையும் பார்த்து, விசாரித்து தன் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யும் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இன்னும் சற்று தீர சிந்திதோமானால் இது மாதிரியான விசயங்களை தனக்கு வரபோகும் மனபெண்ணிடமோ அல்லது ஆணிடமோ நேரடியாக கேட்க முடியாது என்பதுதான் உண்மை.
இதை தவிர்க்க சில முறைகளை நாம் மேற்கொள்ளலாம்.
*) ஆணோ அல்லது பெண்ணோ , தனக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் திருமணம் நடக்க போகிறது என்றால் , தானாகவே முன்வந்து "திருமணத்திற்கு நாம் மன மற்றும் உடல் அளவில் தகுதியாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முறையான மருத்துவரிடம் சென்று முழு உடல் சோதனை எடுத்து கொள்ளலாம்". இதில் ஏதாவது குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எடுக்க போகும் சோதனையை இப்போதே எடுத்து கொண்டதுக்கு சமமாகி விடும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சில மனகசப்பை தவிர்கவும் இது ஒரு வாய்பாக அமையும்.
அல்லது
*) ஆண் மற்றும் பெண் இரு வீட்டிலும் , தனக்கு வரபோகும் ஆணோ அல்லது பெண்ணோ முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று முழு தைரியத்துடன் கேட்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ரத்த பரிசோதனை சான்றிதலையாவது கேட்கலாம். இது ஓரளவு எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து தன் குடும்பத்தை காக்க ஓரளவு வழியாக அமையும் .
தாம்பத்யம் என்பது இல்லறத்தில் ஒரு பகுதிதான் என்றாலும் , அதுவே ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரிய சக்தியாக வளர்த்து நிற்கும் பொழுது மேலே கேட்க தூண்டும் கேள்விகள் தப்பு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு நிகழ்வு படிக்கச் சற்று சந்தோசமாக இருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் எந்த ஒரு திருமணம் நடந்தாலும் , திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்களாம். அவ்வாறு ஒரு திருமணத்தின் பொது மன ஆணுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்க பட்டு பின்பு திருமணத்தை நிறுத்தினார்களாம். இல்லைஎன்றால் அந்த பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியே?
ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே , இன்னொரு நண்பரும் என்னுடைய தங்கைக்கும் இதுமாதிரிதான் , அவரும் இப்பொழுது எங்கள் வீட்டில்தான் உள்ளார் என்று கூறினார்.
பின்பு தீர விசாரித்த பொழுது , இவருக்கும் உள்ள பிரச்சினை பொதுத்தான் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் தாம்பத்யம் நடக்கவில்லை என்பதுதான் அது.
பொதுவாகவே இது மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலருக்கு தாம்பத்யம் நடக்கவில்லை என்றும், இன்னும் சிலருக்கு ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விஷயம் சற்று விஸ்வரூபம் எடுத்து விவாகரத்து வரையிலும் சென்று உள்ளன. மனோதத்துவ நிபுணர்களுக்கு வரும் பெரும்பாலான சந்திப்புகள் இதனுடன் சம்பந்த பட்டே வருகின்றன. பின்பு அவர்கள் கூறும் சிகிச்சைக்கு உட்பட்டு குணமாகி பின்பு குழந்தை பேறு உண்டாகி சந்தோசமாக வாழ்கை சென்றதாக கூறும் சம்பவங்களும் இங்கு உண்டு.
மேலே கூறிய விசயங்களை பார்க்கும் பொழுது , என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.
திருமணத்திற்கு முன்பு அனைத்து விசயங்களையும் பார்த்து, விசாரித்து தன் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யும் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இன்னும் சற்று தீர சிந்திதோமானால் இது மாதிரியான விசயங்களை தனக்கு வரபோகும் மனபெண்ணிடமோ அல்லது ஆணிடமோ நேரடியாக கேட்க முடியாது என்பதுதான் உண்மை.
இதை தவிர்க்க சில முறைகளை நாம் மேற்கொள்ளலாம்.
*) ஆணோ அல்லது பெண்ணோ , தனக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் திருமணம் நடக்க போகிறது என்றால் , தானாகவே முன்வந்து "திருமணத்திற்கு நாம் மன மற்றும் உடல் அளவில் தகுதியாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முறையான மருத்துவரிடம் சென்று முழு உடல் சோதனை எடுத்து கொள்ளலாம்". இதில் ஏதாவது குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எடுக்க போகும் சோதனையை இப்போதே எடுத்து கொண்டதுக்கு சமமாகி விடும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சில மனகசப்பை தவிர்கவும் இது ஒரு வாய்பாக அமையும்.
அல்லது
*) ஆண் மற்றும் பெண் இரு வீட்டிலும் , தனக்கு வரபோகும் ஆணோ அல்லது பெண்ணோ முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று முழு தைரியத்துடன் கேட்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ரத்த பரிசோதனை சான்றிதலையாவது கேட்கலாம். இது ஓரளவு எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து தன் குடும்பத்தை காக்க ஓரளவு வழியாக அமையும் .
தாம்பத்யம் என்பது இல்லறத்தில் ஒரு பகுதிதான் என்றாலும் , அதுவே ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரிய சக்தியாக வளர்த்து நிற்கும் பொழுது மேலே கேட்க தூண்டும் கேள்விகள் தப்பு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு நிகழ்வு படிக்கச் சற்று சந்தோசமாக இருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் எந்த ஒரு திருமணம் நடந்தாலும் , திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்களாம். அவ்வாறு ஒரு திருமணத்தின் பொது மன ஆணுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்க பட்டு பின்பு திருமணத்தை நிறுத்தினார்களாம். இல்லைஎன்றால் அந்த பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியே?
ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்
Subscribe to:
Posts (Atom)