7 ம் அறிவு படத்த பார்த்துட்டு பல பேரு பல கமெண்ட்ஸ் குடுத்துகிடுதான் இருக்காங்க. சில பேரு படம் சூப்பர் அப்படினும், சில பேரு படம் மொக்கனும், இன்னும் சில பேரு தமிழனு நினைக்கும் போது பெருமையாவும் இருக்குனு சொல்றாங்க. முருகதாஸ் இந்த படத்த பத்தி சொல்லும் போது, இந்த படத்த பார்த்துட்டு நீங்க தமிழனு நினைக்கும் போது ஒரு திமிரு இருக்கும்னு சொல்றாரு. ஆனால் எனக்கு என்ன தோனுதுனா, ஏன் இந்த இன வெறி? ஏன் இந்த மொழி வெறி?
மொழி ங்கிறது ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். தமிழ் மொழி பழமையானது, வரலாறு மிக்கது.சரி ஒத்துகிறேன்.ஆனால் அத சொல்லிகிட்டே இருக்குறதுனால, அந்த மொழி பேசுற நான் தமிழன் அப்படின்னு சொல்லிகிரதுல என்ன வந்துற போதுன்னு எனக்கு தெரியல. இதுல என்ன திமிரு இருக்கு இல்ல இதுல என்ன பெருமிதம் இருக்கு. ஜஸ்ட் அது ஒரு மொழி அவ்வளவுதான. தமிழ் மொழி பேசுரவந்தான் பெருமையான்வனு நினச்சா...பிறவியிலேயே வாய் பேச முடியாதவங்க, இல்ல பிறவியிலேயே காது கேட்காதவங்க,இல்ல மொழிந்கிரதையே உணர முடியாத நிலையில உள்ளவங்கள எப்படி நீங்க பார்குறிங்க? அவங்க வாழ்வதற்கு உரிமையே இல்லாதவங்களா? அவங்களுக்கு பாவம் மொழிந்கிறதே என்னனு தெரியாது....அவங்கல என்ன பண்ணலாம்? அவங்களுக்கு எல்லாம் திமிரே இருக்க கூடாதா?
எனக்கு என்னமோ இப்படிதான் எல்லாமே தொடர்கிரதொனு தோணுது...நீங்க மொழில தமிழ் மொழிதான் உயர்ந்தது அப்படின்னு சொல்றிங்க....உடனே இன்னொருத்தன் என்ன பண்ணுவான் அப்படினா ஜாதில ஏன் ஜாதி தான் உயர்ந்தது னு சொல்லுவான்..இன்னொருத்தன் மதத்துல என் மதந்தான் உயர்ந்ததுனு சொல்லுவான். அப்புறம் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.இது ஒரு பொழப்பா ?
சரி...அப்படியே தமிழ் , தமிழ் னு சொல்றவங்கனாசும் உண்மையா இருகிங்களா ..அதுவும் இல்ல....ஈழ தமிழர்களுக்கு நம்ம என்ன பண்ணிட்டோம்....அப்பப்ப சவுண்ட் கொடுப்போம்...சூடு ஆரிருசுனா மூடிகிட்டு இருப்போம்..இதுதான நடக்குது.....வேற எதாச்சும் இத மீறி நடந்துருச்சா....இல்ல இந்த படத்த எடுத்த முருகதாஸ் தான் உண்மையா இருக்காரா......தமிழ் படத்துல போதி தர்மர் தமிழர்னு சொல்றிங்க.....தெலுகு ல அவர வேற மாதிரி ப்ராஜெக்ட் பன்றிங்கனு சொல்றாங்க..இது தேவையா.....? தமிழ், தமிழ் னு சொல்றவரு என் ஹிந்தி ல போய் படம் எடுக்குரிங்க? தமிழ் மொழிலேயே எடுக்க வேண்டியதுதான....போதி தர்மர வச்சி , நாம தமிழர்னு பெரும படுறதா சொல்றிங்க....ஆனால் அந்த போதி தர்மர் தமிழருக்கு ஒன்னும் பண்ண மாதிரி தெரியல....அவர் என்னடானா சீனா நாட்டுக்கு போய் அங்க போய் எல்லாம் கத்து குடுத்துகிட்டு இருகாரு. எனக்கு என்னமோ அவர் கரெக்டாதான் இருக்குற மாதிரி தோணுது...நம்மதான் அவர தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்.
இதுலந்த ஒன்னும் மட்டும் புரியுது....தமிழரா நடித்துரிகுற சூர்யா வ சாகடிகுனும்னா விசத்த கலந்து கொடுத்தா காலி பண்ணிரலாம் போல...நானும் "நந்தா" படத்துழந்து பார்க்குறேன்...மனுசன இப்படியே சாகடிசிகிடு இருக்காங்க.
ஆக, இது மாதிரி தயவு செஞ்சு மக்களை உசுபேத்துரத நிறுத்துங்க சார்......நீங்க தூக்கி வச்சி ஆடுற தமிழ் இனத்துல முட்டாள் தனமா முடிவு எடுக்குற சில மக்கள் இருக்குறாங்க ..முத்து குமார் மாதிரி, சமீப காலத்துல தீகுளிச்சி இறந்து போன அந்த பொண்ணு மாதிரி....தேவ இல்லாம சில பேர நீங்களே உருவாகாதிங்க....
இது மாதிரி இந்தியா ல இன்னொரு கும்பல் செம்மைய கடுபேதிகிட்டு இருக்காங்க....யாருன்னு கேட்குரிங்கலா....அவர பத்தி ஒரு tag line குடுத்தா புரிஞ்சிரும்னு நினைக்கிறன்....."அவர் கொஞ்ச நாள் முன்னாடி சாப்பிடாம பேசிக்கிட்டு இருந்தாரு.....இப்ப பேசாம சாப்பிட்டுகிட்டு இருகாரு..." அவரேதான் அன்னா ஹசாரே தான்.மனுஷன் ஏதாவது ஒரு விரதம் எடுக்காம இருக்க மாட்டாரு போல..... இவரும், இவர் கும்பலுல இருக்குறவங்க சேட்ட தாங்க முடியல. இவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு வேற. ஒரு 5 பேர் சேந்துகிட்டு உண்ணாவிரதம் இருப்போம்னு அரசாங்கத்த மிரட்டுவான்கலாம், அதனால இவங்க சொல்றத கேட்கனுமா....என்ன நடக்குது இங்க....
ஊழல ஒழிக்கணும்னு சொல்றது எல்லாம் கரெக்டுதான்....ஆனால் அதற்கு ஒரு முறை னு ஒன்னு இருக்குல.....முதல ஒரு பொது நல வழக்கு போடுங்க...இது மாதிரி ஒரு சட்ட மசோதா கொண்டு வரணும்னு.....ஒத்துகலனா ..அதுக்கப்புறம் நீங்க உண்ணாவிரதம் இருங்க.....எதுவுமே பண்ண மாட்டிங்க.....ஆனால் நீங்க சொல்றத எல்லாம் கேட்கனும்னா எப்படி ? தமிழ் நாடுலயும்தான் சமசீர் கல்வி கொண்டு வர கூடாதுன்னு சொன்னங்க....இங்க உள்ளவங்க எல்லாம் உண்ணா விரதமா இருந்தாங்க?....பொது நல வழக்கு போட்டாங்க...அவங்களுக்கு தீர்ப்பு கிடச்சது....இப்ப சமசீர் கல்வி தமிழ் நாட்டுல இருக்கு...இது மாதிரி இந்த கும்பல் எதுவுமே பண்ணல.....ஆனால் இவங்க சொல்றத கேட்கணும்.....அது எப்படி?
பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு.....எந்த ஊழல் சட்டம் கொண்டு வந்து ராஜா, கனிமொழி எல்லாம் சிறையில இருக்காங்கனு? ஆக சட்டம் எல்லாம் கரெக்டான் இருக்கு.....அரசாங்கம்தான் சரியா இருக்கனும்.....அத மாத்துறதுக்கு நீங்க பிரசாரம் பண்ணுங்க....இல்ல நீங்களே நல்ல ஆளுங்கள தேர்வு பண்ணி தேர்தலுல நில்லுங்க....அத விட்டு நீங்க கடந்த தேர்தலுல பிஜேபி ஓட்டு போடுங்கனு சொல்றது சரியா படலையே சார்? பிஜேபி என்ன அவ்வளவு நல்ல கட்சியா? மத வெறி பிடிச்சி பாபர் மசூதிய இடிகிரதுகு ஆழ கூட்டிட்டு போய் அத இடிச்சி, அத தலைமை தாங்கி நடத்திய அத்வானிக்கு ஆதரவு தர சொல்றது எந்த விதத்துல நியாயம் அப்படின்னு தெரியல ?
சரி அந்த கும்பலுல ஒருத்தரா இருக்குற....கிரண் பே(கே)டி மேல இப்ப சுமத்துன குற்றத பார்த்தா இன்னும் கேவலமா இருக்கு....விமான சீட்டுல கொடுத்த காசுல காச அடிச்சிட்டு....அத நான் use பண்ணல...என்னோட டிரஸ்ட் க்கு தான் use பண்ணேன்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்..? வடிவேலு சொன்னதுதான் நியாபகம் வருது....."ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" அது மாதிரி "மத்தவங்க பண்ணா ஊழல்...நீங்க பண்ணுனா பொது நலமா?" என்ன லாஜிக் இதுன்னு புரியல.....இந்த கும்பலுக்கு இந்தியா முழுவதும் எப்படி ஆதரவு தந்தாங்கனுதான் புரியல.....ஆனால் அந்த விசயத்துல அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். ..
Monday, November 7, 2011
Saturday, August 6, 2011
திலீபன் - ஒரு சகாப்தம் !!!

எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனது 25 வது வயதில் கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் நின்று, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை எதிர்த்து போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று அனைவராலும் கவனிக்க பட்டார்.அவர் பெயர் இராமச்சந்திரன்.Lawyer ஆக திருச்சியில் தற்போது பணியாற்றி கொண்டு இருக்கிறார். கவுன்சிலராக தேர்தலில் நிற்பது என்பது சாதாரண விசயமாக இருந்தாலும் தன்னுடைய 25 வயதில் அந்த பதவிக்கு நிற்க வேண்டும் என்று தோன்றியதும், அதற்காக உழைத்து கணிசமான வாக்குகளை பெற்றதும் என்னை பொறுத்த வரையில் ஒரு சாதனையே. அதை அவரிடம் நேராக கூறியும் இருக்கிறேன். எனக்கு தற்போது 29 வயது. 4 வருடங்களுக்கு முன்பு என்னால் அது மாதிரி யோசிக்க முடிந்ததா என்று யோசிக்கும் பொழுது, இல்லை என்கிற பதிலே எனக்கு தோன்றுகிறது. அப்படியே நின்றாலும் அந்த சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடிகின்ற அளவுக்கு எனக்கு மனபக்குவம் இருந்திருக்குமா என்றாலும், இல்லை என்றே தோன்றுகிறது. ஆக அந்த இளம் வயதில் அவர் அதை அசால்டாக எதிர்கொண்டது ஒரு சாதனையே.
எனக்கு தெரிந்து வரலாற்றில் இளம் வயதில் தன் வயதையும் மீறி சாதித்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் சில பேர். பாரதியார், பகத் சிங்க், சேகுவாரா. ஆரிய குலத்தில் பிறந்து ஜாதி இல்லை என்று அந்த காலத்திலே கூறி, தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தவர் பாரதியார் . " இது என்ன சந்தோசம், என் பெண் கல்யாண வயதில் ஒரு கீழ் ஜாதி பையனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் அதுதான் எனக்கு மிக பெரிய சந்தோசம்" என்று கூறியவர். ஆனால் தன்னுடைய 39 வயதில் நோய்வாய் பட்டு இறந்து விட்டார். பகத் சிங்க், தன்னுடைய 24 வது வயதில் சுதந்திர போராட்டத்திற்காக தூக்கில் ஏறிய மாவீரன். சேகுவாரா, மக்கள் எந்த ஒரு நாட்டின் மூலையில் ஒடுக்க பட்டாலும் , அதற்காக போராடுவேன் என்று கூறி , கியூபா புரட்சியில் போராடி வெற்றியை வாங்கி தந்து , அந்த நாட்டில் கிடைத்த உயர் அமைச்சர் பதவியை துறந்து , இன்னொரு புரட்சியில் தன்னுடைய 39 வயதில் உயிர் துறந்த வீரன்.
இந்த மாவீரர்களின் வரிசையில் இருபவர்தான் திலீபன். யார் இந்த திலீபன் ? - விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவனாக இருந்து, இந்திய அரசிடம் தன்னுடைய 5 அம்ச கோரிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , இந்திய அரசு இவருடைய கோரிக்கைகளை ஏற்காத காரணத்தினால் , உண்ணாவிரதத்தின் 12 வது நாள் முடிவில் தன்னுடைய 24 வது வயதில் உயிரை தமிழ் ஈழ மக்களுக்காக துறந்த ஒரு வீரன்தான் திலீபன். வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய " தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்" என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது இவரை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு திலீபன் என்பவர் விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்த தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பின்பு இவரை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாஞ்சிநாதன் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தின் 12 நாட்களும் திலீபனுடன் கூட இருந்து , திலீபனின் உயிர் அணு அணுவாக அவர் உடலை விட்டு பிரிவதை நேரில் கண்டவர்.
உண்ணாவிரதம் இருப்பது என்பது ஒரு விசயமாக இருந்தாலும், தன்னுடைய 24 வயதில் 5 அம்ச கோரிக்கைகளுக்காக மன உறுதியுடன் இருந்து உயிரை இழப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. அதுவும் 24 வயதில் எங்கிருந்து இவருக்கு இவ்வளவு மன உறுதியும் , மன பக்குவமும் வந்தது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமான ஒரு விசயமாகவே படுகிறது. பிரபாகரன் அவர்கள் இந்த இளம் வயதில் இவருக்கு அரசியல் பிரிவு தலைவர் பதவியை அளித்திருகிறார் என்றால் இவருடைய தனி தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தில், இவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். திலீபன் இந்த அற போராட்டத்திற்கு முன்பு , போரில் ஈடுபட்டு தன்னுடைய குடலில் 12 அங்குலத்தை இழந்தவர் என்பதும், ஒரு முறை சிங்கள படையினர் இவரை சூழ்ந்து , கைது செய்யும் பொழுது தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதையும் கூறும் பொழுது இவருடைய மன உறுதி, மன பக்குவம், ஆபத்து வரும் பொழுது அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்கிற மன முதிர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.
"உண்ணாவிரதம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன்பு உண்ணாவிரதம் என்று கூறி இருந்தவர்கள் எல்லாம் , அவ்வபொழுது தண்ணீர் குடிபார்களாம். காந்தி அடிகளும் இதற்கு விதி விலக்கல்ல, அவரும் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிபாராம். திலீபனிடம் உடல் மோசமாக இருந்த சமயத்தில், இதை கூறி தண்ணீர் குடிக்க சொன்ன பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் " தண்ணீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். அப்படி இருந்து மக்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் தண்ணீரும் இல்லாமல் இருபதுதான் என்று கூறி தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தவர்தான் திலீபன்". அதுமட்டும் அல்லாமல் , உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு முன்பாக வாஞ்சிநாதன் அவர்களிடம் , 5 நாட்கள் கழித்து ஒரு வேலை நான் சுயநினைவு இல்லாமல் போகும் சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் எனக்கு மருத்துவ உதவி செய்ய கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம்.
இதை எல்லாம் பார்த்து, சற்று நம்முடைய மன பக்குவத்தை எண்ணி பார்த்தல் , யோசிக்க வேண்டிய விசயாமகவே உள்ளது. நாம் காலேஜ் படிக்கும் பொழுது , பள்ளியில் நாம் நடந்து கொண்ட முறையை யோசித்து பார்க்கும் பொழுது சிரிப்பாகவும் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த நாட்களில் , காலேஜ் நாட்களில் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. இன்னமும் 5 வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்த நாட்களை யோசித்து பார்த்தால், இவ்வளவு மோசாமாக நாம் இருந்தோமா, நமக்கு மன பக்குவம் இவ்வளவுதான் இருந்ததா என்று நினைக்க தோன்றுகிறது. எப்போதுதான் நாம் திறம் பட முடிவுகளை எடுப்போம்? எப்போது நாம் எடுக்கின்ற முடிவுகள் 5 வருடம் கழித்து யோசித்து பார்க்கும் பொழுது சரி என்று படுகிறதோ அப்போதுதான் நாம் ஓரளவு மனபக்குவதொடுதான் இருக்கிறோம் என்று நம்மை நாமே யூகிக்க முடியும் என்று நினைக்கிறன்.
இதை எல்லாம் பார்க்கும் பொழுது, 24 வயதில் கொள்கைக்காக உயிர் நீத்த திலீபன் ஒரு சகாப்தமே !!!!
இந்த புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பன் வாசுவுக்கு நன்றி :)
Sunday, June 12, 2011
சமச்சீர் கல்வி = சமம் இல்லா கல்வி !!!
இப்பொழுது ஆங்காங்கே அனைவராலும் பேசப்படும் , விமர்சிக்க படும் ஒரு செய்தி சமச்சீர் கல்வி. உண்மையில் இது தேவைதானா என்று கேட்கும் பொழுது கண்டிப்பாக தேவையான ஒன்றே. ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தையை கல்வியில் இருந்தும் ஒழிப்பதற்கு முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் முறை கண்டிப்பாக வரவேற்க தக்கதே.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பாட முறையை பயில வேண்டும் என்பது சரியான ஒன்றே. ஆனால் உண்மையில் இந்த முறையை செயல்படுத்துவதால் எந்த அளவு மாற்றம் இங்கு ஏற்படும் என்று யோசித்து பார்த்தால், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட போவது இல்லை என்றே தோன்றுகிறது.
தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.
உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.
முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.
இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.
தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.
ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.
எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!
தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.
உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.
முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.
இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.
தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.
ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.
எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!
Sunday, May 8, 2011
சும்மா...................... டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
சென்ற வாரம் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது ஒரு போஸ்டரை பார்த்தேன்...புனித நீராட்டு விழா என்று கூறி அந்த பெண்ணின் போட்டோ வையும் போட்டு இருந்தார்கள்....பார்பதற்கு சற்று வியப்பாகவும், அந்த சிறு பெண்ணை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது....இன்னமும் இது போன்ற கேவலமான சம்பிருதாயங்கள் நமக்கு தேவைதானா என்று....இது ஒரு பெண்ணிற்கு தேவைதான் என்று கூறி 1000 காரணங்கள் கூறினாலும், இந்த காலத்திற்கு இது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக வீட்டில் வைத்து செய்வதை செய்து விட்டு முடித்து கொண்டால் போதுமானது என்றே தோன்றுகிறது. இதை பற்றி ஒரு தெரிந்த நபரிடம் விவாதித்த போது, ஒரு பெண் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பால், ஆகவே செய்து விடுவது நல்லது என்று கூறினார். இப்படி இது போல ஒரு பெண் வளர்ந்த பிறகு எதிர் பார்த்தால் என்றால், நாம் அந்த பெண்ணை சரியான முறையில் வளர்க்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.
இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.
சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.
இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.
இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.
சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.
Wednesday, November 17, 2010
என்னத்த சொல்றது ?

செட்டியாரா ...... அவன் நல்ல விவிரமாதான் இருப்பான். தேவரா...... அவன் நல்ல வீரமாதான் இருப்பான். நாயக்கனா.......அவன் இப்படி இருப்பான்...இந்த ஜாதி காரன் இப்படி இருப்பான் என்று ஒவ்வொரு இனத்தையும் , ஒவ்வெரு ஜாதியையும் பேசுவதை நீங்கள் நடைமுறை வாழ்கையில் கேட்டு இருக்கலாம். அதாவது ஒரு ஜாதியை வைத்து அல்லது ஒரு இனத்தை வைத்து அவன் எப்படி இருப்பான் என்று யூகித்து விடுகின்றோம், அதற்கு ஒரு பழமொழியையும் வைத்து விடுகின்றோம். உண்மையில் அவன் அப்படி இல்லை என்றாலும் ...நீ இப்படிதான் என்று முடிவே செய்து விடுன்கின்றோம். இது உண்மைதானா?..
செட்டியார் இனத்தில் மட்டும்தான் மக்கள் விவரமாக இருகின்றார்களா.. மத்த இனத்து மக்கள் எல்லாம் ஏமாளிகளா...? ....வீரமானவர்கள் அனைவரும் தேவர் இனத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா....மத்த இனத்து மக்கள் எல்லாம் கோழைகளா? இது ஒரு வகையில் பேச்சுக்காக சொல்வது என்றாலும்...சில பேர் இதை உண்மை என்றே நினைத்து கொண்டு அவர்களிடம் உறவாடுவதுதான் பிரச்சினையே......அவன் ஒரு விஷத்தை சாதாரணமாக கூறி இருந்தாலும் ..இவன் இப்படிதான் கூறி இருப்பான் என்று நாமே ஒரு முடிவு செய்து கொள்வதுதான் வேடிக்கையானது. உண்மையில் எவனுடைய குணத்தையும் , அவன் வளர்ந்த மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை வைத்து யூகிகலாமே தவிர...எவனுடைய குணத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பதே உண்மை.
இதே போலதான் பார்பனியத்தை பற்றி பல பேர் சொல்லி கொண்டு இருப்பதையும் , கூறி கொண்டு இருபதையும் பார்த்திருப்போம். பெரியார் சொல்வது போல் அந்த காலத்தில் சரி .....அவர்கள் பார்பனியத்தை வளர்த்தார்கள். உண்மைதான். ஆனால் இந்த காலத்திலும் அவர்கள் இன்னும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்....அந்த இனத்தில் உள்ள மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு இல்லாமலா இருந்து இருக்கும். அல்லது ஐய்யர் இனத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் இந்து மதத்தையும், ஜாதியையும் வளர்கின்றார்களா .....வேறு இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா.....அவர்கள் எல்லாம் ஜாதியை வளர்கவே இல்லையா....? நமக்கு கீழும் ஒரு ஜாதி இருக்கின்றது என்று இருபவர்கள் அனைவரும் ஜாதியை வளர்த்து கொண்டுதான் இருகின்றார்கள்....இது உண்மைதானே.....அந்த இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் அப்படிதான் இருக்க வேண்டும் என்றால் ....பாரதியார் எப்படி வந்தார் பார்பனர் இனத்திலிருந்து.....பெரியார் எப்படி வந்தார் நாயகர் இனத்தில் இருந்து.......அவர்கள் புரட்சி செய்ய வில்லையா?
இதே போன்றுதான் இஸ்லாமிய இனத்தையே கேவல படுத்துவது என்று ஒரு கூட்டமே இருக்கின்றது...... இன்னமும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலையும் இஸ்லாமியார்களை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.....காரணம் அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள மாட்டார்களாம் .....அவர்களும் சுத்தமாக இருக்க மாட்டார்களாம். .என்னமோ கிறிஸ்தவ , இந்து இனத்தவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் நியமான்வர்கள் என்பதை போல.....இந்து மதத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் இயக்கம் இல்லாமலா இருக்கிறது?

ஆக ஒரு தனி பட்ட மனிதரின் நடவடிகையை வைத்து ஒரு இனத்தையே கூறுவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்படிதான் ஒரு முறை நண்பரிடம்......தீவிரவாதம் என்றால் இஸ்லாமிய இனத்தை குரிபிடுகிரிர்களே. ....அப்துல் கலாம் எந்த இனம் என்று கேட்டதற்கு .....அவர் மட்டும் என்ன அணு குண்டு, ராகேட் என்று ஆயுதம் தயாரிபதற்குதானே தலைவராக இருந்தார் என்றார் ............இந்த பதிலுக்கு அப்புறம்....அவரிடம் என்னத்த பேசுவது ?
என்னத்த சொல்றது ?
Thursday, September 16, 2010
எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

பல மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் மகளை "pre -kg " இல் சேர்த்து விட்டோம் ஒரு நார்மலான பள்ளியில். ஜாதியில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் படிவத்தில் ஜாதி இடத்திற்கு ஒன்றும் போடாமல் விட்டு விட்டோம். அப்போது அவர்கள் பள்ளியில் ஆட்கள் சேர வேண்டும் என்பதற்காக சரி என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சிறிது கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் உங்கள் ஜாதி என்ன என்று நச்சரித்து விட்டார்கள். நாங்களும் ஜாதியில் உடன்பாடு இல்லை , அதனால் ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை. "நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் , நாங்கள் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.
சரி,, கண்டிப்பாக கொண்டுக்கதான் வேண்டுமா என்று தெரிந்த சில வழகரிசர்களிடம் விசாரித்தபோது, அப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இப்போது எல்லா பள்ளிகளிலும் , ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை, கட்டாயமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விட்டால் , ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் என் குழந்தைக்கு ஜாதியை முன் வைத்து கொண்டிருக்கும் எந்த சலுகையும் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று ஒரு எங்களிடம் ஒரு ஐடியாவையும் கொடுத்தார். அதற்கும் ஒத்து வரவில்லை என்றால், வழக்கு போட்டு கொள்ளலாம் என்றார்.
அவர் சொல்வது சரிதான். பள்ளி நிர்வாகம் ஒத்து வரவில்லை என்றால் வழக்கு தொடரலாம். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து அந்த பள்ளியும் அதே மாதிரி கேட்டு விட்டால் அந்த பள்ளியில் வழக்கு தொடர முடியும். ஆனால் அதற்கு பின்பு நமது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க முடியுமா என்று நினைத்தால், கண்டிப்பாக முடியாது.பிரச்சினைதான் வளரும். ஜாதியிலும் உடன்பாடு இல்லை, ஆனால் பள்ளியிலும் சேர்கதான் வேண்டும். என்ன செய்வது என்று தெரிய வில்லை.ஒன்று சரி என்று ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் நமது கொள்கை இதில் அடி பட்டு விடும். இல்லை கொள்கைதான் முக்கியம் என்று நினைத்தால் , குழந்தைகளை வீட்டில் வைத்து நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல..என்னதான் செய்வது......? ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள், இதில் கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் எல்லாம் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டார்கள் என்று தெரிந்தால் நமக்கும் சிறிது புண்ணியமாக இருக்கும்..........
ஜாதியை தெரிவிப்பதினால், தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைப்பது உண்மைதான். இவ்வாறு தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து படித்து, நல்ல வேளையிலும் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு , தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று நினைகிரார்களா என்றால்.....இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்(ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள்). இந்த சலுகையினால் ஓரளவு தாழ்ந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் முன்னேறி கொண்டு இருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தோசம் முன்னேறட்டும்.பல நூற்றாண்டுகள் அடிமைகளாக , படிப்பறிவே இல்லாமல் இருந்தவர்கள் படிக்கதான் வேண்டும்...எல்லா சமுதாயரையும் போல முன்னேறதான் வேண்டும்.
ஆனால், நம்முடைய எண்ணம் ஜாதி என்ற ஒரு நிலையே இருக்க கூடாது என்பதுதான். ஆக இவ்வாறு சலுகைகளை பெற்று படித்து வந்தவர்கள் , தன்னுடைய அடுத்த வம்சதினற்கு ஜாதியை வைத்து வரும் எந்த சலுகையும் வேண்டாம் என்று உதறி தள்ளினால் ஓரளவு ஜாதி என்ற நிலையை குறைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத்தான் நான் கருதுகிறேன். பள்ளியில் ஜாதியை கேட்பது ஒரு விதத்தில் சலுகைகளுகாகதான் என்பதால், ஓரளவு முன்னேறியவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று ஜாதியை உதறி தள்ளினால், ஜாதி என்ற குறியீடு ஓரளவு நீக்க படும் , பள்ளி நிர்வாகமும் இதற்கு ஏதாவது வழி செய்யும்.
ஜாதி என்ற ஒரு நிலையை பள்ளியிலேயே நிறுத்தி விட்டோம் என்றால் ஓரளவு ஜாதியின் பயன் பாட்டை குறைத்து விடலாம். ஆனால் இதற்கு இந்த சமுதாயமும் , அரசாங்கமும் வழி விடுமா என்று யோசித்தால் கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இதை குறைபதற்கு, சிவப்பதிகாரம் படத்தில் சொல்வது போல " எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!"
Friday, July 23, 2010
அற்பங்களின் தேசபற்று

எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் தொலை காட்சியில் தேசிய கீதம் ஓடினால் கூட எழுந்து நின்று தேசத்தின் மீது பற்றை தெரிவிக்கும் பழக்கம் உடையவன். எனக்கு இந்த விஷயம் தெரிந்த போது சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருந்தது. உண்மையில் தேச பற்று என்பது தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதிலும், மூவர்ண கொடியின் சிறப்பை சொல்வதிலும், தேச தந்தை யார் என்று சொல்வதிலும் , தேசிய கீதத்தை யார் இயற்றினார்கள் என்று சொல்வதிலும் தான் இருக்கிறது என்றால் அப்பேற்பட்ட தேச பற்று எனக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய பேர் தேச பற்று என்பது கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதோடு முடிந்து விடுகிறது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் உண்மையாக அப்பேற்பட்ட சமுதாயத்தில்தான் நாம் வசித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
நம்மை நாமே சற்று கேட்டு கொண்டால், உண்மையாக தேச பற்று என்பது நம்மிடம் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். ராணுவத்தில் ஆள் எடுக்கும் பொழுது கூட, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு , அங்கு பிடித்து இங்கு பிடித்து ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விடுகிறோம், விவரமே தெரியாத வயதில். அந்த 16 , 17 வயதில் உண்மையிலேயே தேச பற்று இருக்குமா என்று கேட்டால் சற்று கடினமே.
ஒரு விஷயம் புரிய வில்லை. நாம் வசிக்கும் வீடு சரி இல்லை என்றால் , அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுகிறோம். நான் வசிக்கும் ஏரியா மக்களே சரி இல்லை என்றால் , அந்த ஏரியா சரி இல்லை என்று கூறி வேறு ஊருக்கு சென்று விடுகிறோம். நாம் வேலை பார்க்கும் இடத்தில், சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்றாலோ அல்லது மேனேஜர் சரி இல்லை என்றாலோ , அந்த வேலையை விட்டே சென்று விடுகிறோம். இதுதான் உண்மையும் கூட. ஆக, நான் வசிக்கும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ள மக்கள் எனப்படும் சமுதாயம் மிகவும் முக்கியம். அதை வைத்துதான் ஒரு இடத்தையே நாம் தீர்மானம் செய்கின்றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது, உண்மையில் நம்மை சுற்றி உள்ள சமுதாயம் சரியாகதான் இருக்கிறதா ?
எப்பேர்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? சற்று சிந்தித்து பாப்போம்.
*) தமிழ் நாட்டை எடுத்து கொண்டால், காவிரி பிரச்சினை. மும்பையை எடுத்து கொண்டால் மராட்டியர் பிரச்சினை. இன்னும் தமிழ் நாட்டை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிடமும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
*) இன்னும் சற்று உள்ளே சென்றால், முக்கியமாக ஜாதி பிரச்சினை, மத பிரச்சினை, இன பிரச்சினை.
சரி நமது அன்றாட வாழ்கையை எடுத்து கொள்வோம்....
சரி ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி , ஆட்டோ வை பிடிக்க அழைத்தோம் என்றால், அவர்கள் கேட்கும் பணம்........இரண்டு மூன்று தடவை அவர்கள் ஆட்டோவில் சென்றால் அந்த ஆட்டோவையே வாங்கி விடலாம். அந்த அளவிற்கு இருக்கிறது. ஆட்டோவில் ஏறினால், மீட்டர் போட வேண்டும். எத்தனை ஆட்டோவில் மீட்டர் இருக்கிறது..? அப்படியே அவரை போட சொன்னோம் என்றால், அவர்கள் நம்மை கேனயனை விட கேவலமாக பார்த்து திட்டி , ஆட்டோவை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.
நம்மிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது என்றால், இந்த மாநகரத்தில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வத்திற்குள், எவ்வளவு பிரச்சினை? முன்னாடி வாகனத்தில் செல்பவர்கள், பின்னாடி யார் வருகிறார்கள் என்று சற்றிலும் சிந்திக்காமல் எச்சிலை உமிழ்ந்து விட்டு செல்வார்கள்...இது முன்னாடி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அல்ல....பஸ்ஸில் செல்பவர்களும் இப்படிதான் . இது மட்டும் அல்ல சிகரெட் சாம்பலை தட்டுவது..அல்லது அப்படியே அனைக்காமல் நடு ரோட்டில் போடுவது போன்ற பல கொடுமைகள்.
சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், நம் மக்களிடம் இல்லாதது சுய ஒழுங்குதான். சரி....இந்த சுய ஒழுங்கை பாது காக்க நம்மிடம் உள்ள போலீஸ் காரர்கள் சுய ஒழுங்கோடுதான் இருக்கிறார்களா....? அதுவும் இல்லை. எங்கும் லஞ்சம்....எதிலும் லஞ்சம்.... ஏன்? போலீஸ் வேளையில் சேர்வதிலும் லஞ்சம்.....பின்பு அவர்களிடம் எங்கு நாம் சுய ஒழுங்கை பாது காக்க சொல்வது......வாய்ப்பே இல்லை.......சரி....அங்குதான் இல்லை....நீதிமன்றம் என்று சென்று நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் , நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள். எங்குதான் செல்வது......இவர்களிடம் கேட்டால் தேச பற்று என்பார்கள்..........இப்படி இருக்கும் சமுதாயத்தில் தேசபற்று எப்படி வரும் ?
ஒரு மாதத்திற்கு முன்பு , ஒரு நில வழக்கு முடிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நியாயமான வக்கீலிடம் சென்றால், அவர் விசாரித்து விட்டு உங்கள் நிலையில் நியாயம் இருக்கிறது என்றாலும் ....வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும் என்று சொல்ல என்னால் முடியாது....ஏன் என்றால் ஏன் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை....நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.....போராடுவோம்....பார்போம் என்று கூறி விட்டார்.....இப்பேற்பட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் இருப்பது எல்லாம் தேச பற்று என்றால் ....தேச பற்றை என்னவென்று சொல்வது......?
இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எடுதால் கூட , நம்மை சுற்றி உள்ளவர்கள் பலர் அலுப்பைகள் தான். இப்பேற்பட்ட அலுபைகள் இருக்கும் நாட்டில் , தேச பற்று என்பது எந்த நிலையில் இருக்கும்...அப்படியே இருந்தாலும் ,இந்த அலுபைகளிடமிருந்து எந்த அளவு தேச பற்று இருக்கும்? கேள்வி குறியே !!!!!!!!
ஜப்பான் நாடு சிறிய நாடாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் சுய ஒழுங்கே.....அந்த நாட்டில் எனக்கு சில வருடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்த்த ஒரு சம்பவத்தோடு முடிக்கிறேன்......இங்கெல்லாம் நாம் சரக்கு அடித்து விட்டால் , அம்மா , அக்க, தங்கையை தவிர மற்ற அனைவரையும் கையை பிடுத்து இழுத்து பார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். யாரையாவது வம்பு இழுத்து ஆக வேண்டும் .....அப்போதுதான் நமக்கு மனது சாந்தி அடையும்.....ஆனால் அங்கு அப்படி இல்லை....சரக்கு அடித்தாலும் அந்த மப்பிலும் அடுத்தவர்களை வம்பு இழுக்க மாட்டார்கள். ஒரு முறை வேலை காரணமாக வீட்டுக்கு கிளம்ப மணி அதிகாலை 2 ஆகிவிட்டது. வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன்....வரும் வழியில் ஒரு சிக்னல். என் முன்பு புல் மப்பில் ஒரு 25 வயது உள்ள ஆள் ஒருவர் சென்று கொண்டு இருந்தார் .....ரோட்டில் யாரும் இல்லை....அதனால் சிக்னலை கிராஸ் செய்து விடலாம் என்று நினைத்து முன்னோக்கி சென்று கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கு முன்பு சென்ற குடிமகன் அந்த மப்பிலும் கிரீன் சிக்னலுக்கு காத்து கொண்டு இருந்தார்..சரி என்று நானும் நின்று விட்டேன்......அதிகாலை 2 மணிக்கு.....இங்கு காலை 10 மணிக்கே சிக்னலை மதிக்க மாட்டோம்.....இதுதான் சுய ஒழுங்கு.
ஆக , தேச பற்று என்று சொல்லி ஊரை ஏமாற்றாமல் , ஏதாவது மாறுவதற்கு வழி செய்வோம்......
முன்பெல்லாம் கிரிக்கெட்டில் இந்திய ஆடினால் , நாம் வின் பண்ண வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்....ஆனால் இப்போதெல்லம் அந்த மாதிரி எண்ணம் கனவில் கூட வருவது இல்லை.......
Subscribe to:
Posts (Atom)