Monday, February 23, 2009

கிடைத்து இருக்குமா ஆஸ்கர் இந்த திரைப்படத்தை இந்தியர் இயக்கி இருந்தால் ?

உண்மையிலேயே இந்த படத்தை ஒரு இந்தியர் இயக்கி இருந்தால் இந்த வரவேற்பு மற்றும் ஆஸ்கர் கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறியே ?

உதாரணம் ரஹ்மான் இசை அமைத்த " லகான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு இல்லை உலக அளவில் என்பது உண்மை மற்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க பட்டு பின்னர் வெளியேற்ற பட்டது.

ரஹ்மானின் மற்ற படங்களை ஒப்பிடுகையில் இந்த படத்தின் இசை சுமார் என்பதே எனது கருத்து. ஆனால் இந்த படத்திற்கே இந்த அளவு வரவேற்பு உலக அளவில் என்றால் அவரின் மற்ற படங்களை உலக அளவில் எடுத்து சென்றால் அவரின் மதிப்பு என்னவென்று கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.

இன்று உலக அளவில் பெரிய இசை வல்லுனர்களாக காட்டி கொள்ளும் பல பாப் பாடகர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு ஆல்பத்தை வெளியிட்டு தன்னுடைய புகழை உலகம் முழுவதும் பறை சாற்றி கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய இசை அமைப்பாளர்கள் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களுக்கு இசை அமைத்து , அனைத்து படங்களிலும் ஆறு பாடல்களுக்கு மேல் இசை அமைத்து இன்னும் இந்திய அளவிலே மட்டும் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

எனினும் இந்த விருது , இந்திய இசை அமைப்பாளர்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்கு முதல் படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னும் "இளையராஜா " போன்ற பெரிய ஜாம்பாவனை உலகம் அறியாமல் இருப்பதில் ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும் , இது ஒரு நல்ல தொடக்கம் என்பதே உண்மை.

வளர்க ரஹ்மான் புகழ்.

ப.பிரதீப்
வீழ்வது வெட்கம் அல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.

Sunday, February 15, 2009

திருநங்கை - எனது பார்வையில்

பொதுவாக எனக்கு இந்த சமுதாயத்தில் புரியாத சில விஷயங்கள் மனதை உறுத்தி கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு திருநங்கைகளை எடுத்து கொள்வோம்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அவர்களை எவ்வாறு அழைக்கிறோம்? அலி, ஒன்பது, அஜக்கு . இதில் புதிதாக நான் கேள்வி பட்டது பூனை.
இவர்களை தெருவிலோ அல்லது வேறு எங்கோபார்க்கும் பொழுது நாம் என்ன செய்கிறோம் ? கேலி கிண்டல் , அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்வது அல்லது அடித்து உடைப்பது அல்லது எதாவது செய்து விடுவார்களோ என்று பயந்து பணத்தை கொடுப்பது.

இதை தவிர என்றாவது நாம் அவர்களை மற்றவர்களை போல் மதிக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா?இல்லவே இல்லை. காரணம் அவர்கள் ஆணாகவும் இல்லை பெண்ணாகவும் இல்லை. இவ்வாறு அவர்கள் இருப்பதற்கு காரணம் என்னவென்று நாம் யோசித்து இருக்கிறோமா ?அதுவும் இல்லை....

இவர்களை போன்ற மனிதர்கள் உள்ள இந்த சமுதாயத்திடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.
*) பிறக்கும் பொழுது ஒரு குழந்தை ஊனமுற்றதாக பிறந்தால் , அதை வளர்ப்பதற்கு நாம் என்னனென்ன பாடு படுகிறோம் ...? ....அதன் மேல் பரிதாப படுகிறோம்.....இட ஒதுக்கிடு கொடுக்கிறோம்....காரணம் இது அவர்களின் தவறல்ல....இது இயற்கை .

என்னை பொறுத்த வரையில் திருநங்கை ஆக துடிப்பதும் அவர்கள் தவறல்ல.மரபணுக்களின் மாற்றம் அல்லது ஜீன்களின் ஆதிக்கம். இதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? இதுவும் ஒரு ஊனமே. இந்த ஊனத்திற்கு அவர்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது , பரிதாபமோ அல்லது பணமோ இல்லை.
மற்றவர்களை போல மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதே...

அவர்களுக்கு உடல் சரி இல்லை என்றால் அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. உணவு அருந்த உணவகத்திற்கு செல்ல முடிய வில்லை.இது ஏன்? உச்ச கட்டமாக அவசரத்திற்கு அவர்களால் கழிவறைக்கு கூட செல்ல முடிவது இல்லை.

எப்பொழுதும் குட்ட குட்ட யாரும் குனிந்து கொண்டே இருப்பது இல்லை. சற்று நிமிர்ந்து உரிமையை கேட்க அவர்கள் எடுக்கும் ஒரு சின்ன முயற்சியில் கிடைத்த வெற்றிதான்.....இன்று அவர்களால் தேர்தலில் நிற்க முடிகிறது.

ஆக , அவர்களையும் மதிக்க இனிமேலாவது முயற்சி செய்வோம்.....அவர்களுக்கும் உணர்வு உண்டு மற்ற மனிதர்களை போல என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

எப்பொழுது இந்த சமுதாயம் அவர்களுக்கு ஒரு சரியான அங்கிகாரத்தை கொடுக்க போகிறதோ?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்