Sunday, June 10, 2012

ஆயிசா - பள்ளி கூடம் ஒரு பலி கூடம் ஆன கதை

ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய , எழுதி கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் ஒரு புத்தகத்தின் ஒரு முன்னுரைதான் இது. 10 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக பணி புரிந்தவரை , எது தமிழ் மொழி பெயர்தளை செய்ய தூண்டியது அதுவும் ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை என்பதுதான் அவர் சொல்லியது , நான் சொல்ல வருவது......

அப்போது அவர் , பூமி எப்படி ஒரு காந்தமாக செயல் படுகிறது என்பதை ஒரு வகுப்பில் எடுத்து கொண்டு இருந்துரிகிறார் எல்லா வருடமும் எடுப்பது போல,ஆனால் இந்த வகுப்பில் அவர் இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. 

" மிஸ்" ....
" என்ன வாந்தி வருதா ..வந்தா கிளம்பு "
"இல்ல மிஸ் ஒரு சந்தேகம்"

ஆச்சர்யம்....இருந்தாலும் காட்டி கொள்ளாமல் "என்ன" என்று கேட்க ..

" ஒரு காந்தத்தை ரெண்டாக வெட்டினால் என்ன ஆகும்" 

ரொம்ப இலகுவாக "ரெண்டு காந்தம் வரும்"..

"அந்த காந்தத்தை வெட்டிகிடே  போனா ...உதாரணமாக நமக்கு இந்த காந்தத்தை துண்டாகி கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா எண் என்று வெச்சிட்டா ?"

"ரொம்ப சிம்பிள்மா....முடிவுறா எண்ணிகையில் காந்தம் கிடைக்கும்"

அடுத்து என்ன கேட்பாளோ என்று பயந்து "உட்காரு" என்று சொல்லி விட்டு , ஏதேதோ நடத்தி விட்டு சென்று விட்டார் வகுப்பிலிருந்து.

இருந்தாலும் விடவில்லை அந்த மாணவி....."மிஸ் மிஸ்....காந்தத பத்தி இன்னும் ஒரு சந்தேகம் இருக்கும் மிஸ்...."

"என்னமா....டைம் ஆகிருசுல ....சீக்கிரம் சொல்லு ...."

"முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் ...எதிர் எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்  மிஸ்?"

"................"

"ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தொகை இழுக்கும்..ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டு இருக்கும் இல்லையா ...மிஸ் ?"

"ஆமா ...அதுகென்ன "

"என் சந்தேகம் அங்கனதான் இருக்கு.எல்லா காந்தங்களின் கவர்திறனும் ஒன்றென கொண்டால் அவை ஒட்டி கொள்ளத்தான் வாய்ப்பே இல்லையே. ..எப்புறமும் நகராமல் அப்படியேத்தான இருக்கும் .."  

".................."

"ஏன்நாம இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்தது போல் அமைக்க பட்டதா வசிக்க கூடாது ? அந்த கோணத்துல பூமிங்கிற காந்தத ஆராயலாம் இல்லையா ..."

பதிமூன்று வருட பள்ளி வாழ்கையில் இப்படிப்பட்ட கேள்வியை அவர் கேட்டதில்லை ....

"the truth of matnes.....வெற்றோட் ஸ்டுடென்ட்கிண்க்லீ எழுதியது...அருமையா  இருக்கு ..படிகிரிங்களா மிஸ் ..."

"உன் பேர் என்ன"

"ஆயிஷா".

அறை வாங்கியவள் போல் புத்தகத்தை வாங்கி கொண்டு ஆசிரியர் அறைக்குள் சென்று விட்டார்.

பின்பு அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் விசாரிக்கும் பொழுது ...அவள் இது மாதிரி  பல  கேள்விகள் மற்ற ஆசிரியர்களிடம் கேட்டு அடி வாங்குவாள்  என்றும்....தாய் தந்தை இல்லாததால் சித்தி வீட்டில் இருந்து படிக்கிறாள் என்றும் இந்த ஆசிரியர் தெரிந்து கொண்டார்...இது மாதிரி சில பல கேள்விகளினால் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இருந்த நட்பு கூடியது. இது மாதிரி ஒரு சந்திப்பில் ...இன்னொரு புத்தகத்தை எடுத்து கொடுத்து...இதை படித்தேன் மிஸ் ...ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில் இருபதினால் சரியாக புரிய வில்லை...நீங்கள் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்....செயிறிங்களா மிஸ் ? என்று கேட்க ...பாப்போம் என்று சொல்லி விட்டு....அடுத்த ஒரு கேள்வியை ஒரு கேட்டு இருக்கிறாள்..

"மிஸ் ....துணி துவைக்கும் போதும் அழுக்கு போது...உடம்புக்கு போடுற சோபுளையும் அழுக்கு போகுது....இத அதுக்கு போட்ட ஏன்னா....அத இதுக்கு போட்ட என்ன....."

"ஏண்டி இப்படியெல்லாம் கேட்டு ஏன் உயிரை வாங்குற" 

கேள்வி ஈசியாக இருந்தாலும்..பதில் தான் சரியாக வர வில்லை என்று நினைத்து கொண்டு சென்று விட்டார்.

இன்னொரு நாள் அழுது கொண்டே ஆசிரியரிடம் வந்து நிக்க ....என்ன என்று கேட்கும் பொழுது வரலாறு ஆசிரியர் அடித்து விட்டார் என்று கூறி இருக்கிறார்ள் .

" என்ன அப்படி கேட்ட?"

அவரிடம் இதான் மிஸ் கேட்டேன்....

"அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யாரு மிஸ் "

"புத்த பிச்சு "
"அவர் பெயர் என்ன மிஸ்"
"........."
"அவர் பெயர் உபகுப்தர் மிஸ்"

"தெரிஞ்சு வசிகிடே என்னைய கேட்டு அவமான படுதுரியா ?" என்று கேட்டு ...வெழு வெழு என்றுவெளுத்து விட்டார்.....

பின்பு  இந்த மிஸ்ஸிடம் ......

"அடி வாங்குனா வலிகாம  இருக்குறதுக்கு எதாச்சும் மருந்து இருக்கா  மிஸ்"  என்று அழுதுகிட்டே கேட்டு சென்று  விட்டாள்.

இப்படி பட்ட  வேளையில் தான் அந்த சோகம் நடந்து இருக்கிறது...

"மிஸ் ..உங்கள  ஆயிசா வேதியியல் லேபுக்கு வர சொல்றா  "..

"ஏன் அவ  இங்க வர மாட்டாளா"

"தெரியில    மிஸ் ...உங்கள வர சொன்னா "

சரி என்று அங்கு செல்ல..

"வாங்க மிஸ்....அடி வாங்குனா வலிகாம இருக்குறதுக்கு நான் ஒன்னு கண்டு  பிடிச்சி  இருக்கேன்  மிஸ் ..வந்து பாருங்க " 

"வேதியியல nitres oxide வந்து உடல்  மரத்து போறதுக்காக operation theatrela  பண்றாங்களாம் ...அதான் நான் இந்த தவளைக்கு  first போட்டேன்...அது அப்படியே இருக்கு மிஸ்....அதான் அடுத்து எனக்கு ஒரு ஊசி போட்டேன். "

" அடி பாவி என்னடி பண்ணி வச்சிருக்கே ....என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தவளை இறந்து போக  ...." இவளை ஹோச்பிடளுக்கு  அழைத்து  சென்று இருக்கிறார்கள் ...ஆனால் போகிற  வழியிலேயே  ஆயிசா உயிரை  விட்டு இருக்கிறாள் 

இந்த நிகழ்வு ஆசிரியருக்கு ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்த , இது போன்ற மற்ற ஆசியாகளுக்கு உபயோகமாக இருக்கட்டும் என இந்த தமிழ் மொழி பெர்யர்ப்பை இவர் கையில் எடுத்து இருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இவர் , தற்போது உள்ள கல்வி முறையையும் சாடி இருக்கிறார். 

"எண்கள் தான் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கின்றன. மதிப்பெண்கள்,வரிசை எண், தேர்வு எண். எங்கும் எண்கள் .எண்கள்தான் பள்ளியை ஆள்கின்றன.எல்லா ஆசிரியர்களும் ஒரு வகையில் மாணவர்களின் அறிவை அவமான படுத்தி கொண்டுதான் இருகிறார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியா ....? பள்ளி கூடங்கள் பலி கூடங்கள் ஆகி விட்டன. எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள் .அவற்றிற்கு ரெடிமேட் பதில்கள்.வெறும் மனப்பாடம் செய்யும் ஒரு இயந்திரமாய் மாணவர்கள் வளர்ந்து கொண்டு இருகிறார்கள்"


அவர் சொல்வதும் சரிதான். சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் இப்படி கூறி இருந்தார்." எனக்கு தெரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களும் , பிட் அடித்து அல்லது காபி அடித்து வெற்றி பெரும் மாணவர்களும் ஒன்றுதான் " ...எவ்வளவு உண்மை.

இன்று நீங்கள் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்றால் , புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் உண்டு..இல்லையேல் வாங்க முடியாது. ஆக எல்லா பள்ளிகளும் மனபாடம் செய்வதையே  மாணவர்களுக்கு போதிகின்றார்கள். சொந்த  சரக்கு மதிப்பு இல்லை இப்படி இருக்க  எந்த  பள்ளியில் குழந்தைகளை படிக்கச் வைத்தால் என்ன . இன்றும்  சில முக்கிய பள்ளிகளுக்கு கூட்டம் அலை மோதி வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறோம். இது மாதிரி படிப்தற்கு ஏன் வரிசையில் நின்று படிக்கச் வைக்க வேண்டும். சாதாரண பள்ளியில் படிக்கச் வைத்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது. 

உதாரணத்திற்கு என்னை எடுத்து கொண்டால் , நான் மேல்கல்வி முடித்து வெளியே வரும் பொழுது எனக்கு என்ன தெரியும் என்று யோசித்து பார்த்தால், தமிழ் , ஆங்கிலம் எழுத படிக்கச் தெரிந்ததை தவிர ஒன்றும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் ஆங்கிலம் சுத்தம். எழுத படிக்கச் தெரிந்ததை தவிர வேற சொந்தமாக பேச, எழுத தெரியாது. எவ்வளவு ஈசியான கதை என்றாலும் அதை மனபாடம் செய்து தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலையைத்தான் தமிழ் வழி கல்வி கற்று கொடுத்து இருக்கிறது.

ஆக ஆசிரியர் கூறுவது போல பள்ளி கூடம் ஒரு பலி கூடமாக ஆகாமல் , கண்டிப்பாக உயிர்தெழ வேண்டும்.பள்ளியில் பல மாற்றங்கள் வர வேண்டும் ,சொந்த சரக்குக்கு மதிப்பு இருக்க வேண்டும். அந்த சொந்த சரக்கை மதிப்பிடும் அளவிற்கு ஆசிரியர்களின் நிலையும் உயர வேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு விளையாட்டையும் ஒரு படிப்பாக  வைக்க  வேண்டும். அது   ஓரளவிற்கு  physical fitness m  வளர்க்கும்  விதமாக  இருக்கும் சமசீர்கல்வி ஒரு muthal padi. இன்னும்  வளர  வேண்டும். வளரும். :-)


Sunday, May 20, 2012

ஜாதியும் .....தோஷங்களும்

நபர் 1 : அந்த பொண்ண ஏன்டா வேணாம்னு சொல்லிட்ட?
 நபர் 2: அது sc பொண்ணுன ...அதான் வேணாம்னு சொல்லிட்டேன்


 ரோட்டில் கடந்து போகின்ற பொழுது கேட்ட உரையாடல் இது. திரும்பி கேட்க வேண்டும் என்று தோன்றியது " ஏன் sc பொண்ணுனா அவங்களுக்கு உணர்ச்சிகள் கிடையாதா அல்லது மேட்டர் இல்லையான்னு" . தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஏதாவது ஒரு தனிப்பட்ட தேவைக்காகவோ இன்னமும் இந்த ஜாதியை பிடித்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.வயதானவர்கள் இதை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் இன்றைய இள வயதினரும் இதை சொல்லி கொண்டு அலைவதுதான் வருத்தமான செய்தியாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கும் இள வயதிலிருந்தே ஜாதியை ஊற்றி வளர்த்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.


 இந்தியாவிலிருந்து நிலாவிற்கு மனிதனை அனுப்பினால் கூட ஜாதி ஒதுக்கீடு செய்துதான் இந்தியா அனுப்பும் என்று பலர் தங்களது வெறுப்பை காமித்து கொண்டு இருக்கிறார்கள். வரவேற்க தக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே வேளையில் இவர்களிடம் ,ஜாதி இல்லை என்று கூற சொல்லுங்கள். சொல்ல மாட்டார்கள். ஆக கீழே இருப்பவர்கள் கீழேயே இருக்க வேண்டும், மேலே வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இவர்களை எடுத்து கொள்ளலாம். கீழே உள்ளவர்கள் மேலே வர வேண்டும் என்பதின் ஒரு நோக்கம் தான் இந்த ஜாதி ஒதுக்கீடு.ஆக இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் ஜாதியும் இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்கும். அப்போது இவர்கள் ஜாதி ஒதுக்கீடை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும்.


ஜாதி, மதம் என்று நான் வேண்டாம் என்று சொன்னாலும் நானும் ஒரு வகையில் இதை வளர்ப்பதில் ஒரு மறைமுக ஒரு பங்கை எடுத்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நினைக்கிறன்.  அதாவது , ஒரு குழந்தை படித்து முடித்து எந்த துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் முடிவு எடுப்பதை விட அந்த மாணவன் தேர்ந்து எடுத்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை ஓரளவு நாம் ஒத்து கொள்கிறோம். அவன் துறையை தேர்ந்து எடுப்பதில் சரி. ஆனால், அவன் எந்த மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் அல்லது எடுக்க கூடாது  என்பதை நாம் அவனிடம் கேட்காமலே சிறு வயதிலேயே அவனுக்கு திரித்து விடுகிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு பாதிரியார் , திருமணம் செய்து வைக்கும் பொழுது உனக்கு சம்மதமா என்று இருவரிடமும் கேட்டு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பிறந்தவுடன் எடுக்கும் பப்டிசம் அவனுடைய  சம்மதத்தை கேட்காமலேயே அவனுக்கு நீ இந்த மதத்தைதான் நம்ப வேண்டும் என்று சொல்லி விடுகிறோம். இது எந்த விதத்தில் சரி? இது போன்று ஒவ்வொரு மதத்திலும் ஒரு சம்பிரிதாயம். இது சரியா என்பது கேள்விக்குறியே. சாதியற்ற , மதமற்ற ஒரு மனிதனை உருவாக்கி , அவன் பக்குவம் அடைந்த பிறகு அவனுடைய போக்கில் விட்டு , உனக்கு மதம் பிடித்தால் அதை பின்பற்று. இல்லை என்றால் மதமற்ற வாழ்கை வாழ் என்று கூறினால்.....அது சரி என்று தோன்றுகிறது. !!!!


 அது போல இந்த numerlogy காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. வர வர குழந்தை நமக்கு பிறகிறதா அல்லது numerlogy காரர்களுக்கு பிறகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கலர் அவர்களுக்கு ஒத்து போகும் , எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பதை கூட அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு வேலையும் இல்லை குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து. நண்பர் ஒருவர் புலம்பி கொண்டு இருந்தார், குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் வைக்க முடிய வில்லை. அந்த பெயர் வைக்க கூடாது என்று numerlogist சொல்லி விட்டார் என்று. சுத்த முட்டாள் தனமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ , பிறப்பிலேயே அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்க நாம் வழி செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. பெயரில் என்ன இருக்கிறது? நமக்கு ஒரு பெயர் பிடித்து விட்டால் கண்டிப்பாக வைத்து விட வேண்டும், அது எந்த மதத்தின் பெயராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி.


 இவர்கள் ஒரு பக்கம் என்றால், அடுத்தது இந்த ஜோசிய காரர்கள் தொல்லை. பிறந்த நேரத்தை வைத்து , குழந்தையின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று சொல்லி இவர்கள் படுத்தும் பாடு பெரும்பாடு. சமீபத்தில் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது. அது சிறிய மருத்துவமனை என்பதால் குழந்தை பிறக்கும் பொழுது அழுகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.சரி என்று என் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கும் பொழுது அதில் ஒரு நேரம் காட்டியது. என் அப்பா கடிகாரத்தில் ஒரு நேரம் காட்டியது. சரி இந்த இரண்டு நேரத்தில் எதை எடுத்து கொள்ளலாம் பிறந்த நேரமாக என்று யோசிக்கும் பொழுது நர்ஸ் வந்து ஒரு நேரத்தை சொன்னார். என்னவென்று பார்த்தல் மருத்துவமனையில் ஒரு நேரம் காட்டுகிறது. இதில் எந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ஜோசிய காரர்கள் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே கணித்தாலும் அது எந்த அளவுக்கு உண்மை ஆக போகிறது என்றும் தெரியவில்லை.




 அப்படியே சரியான குழந்தை பிறந்த நேரத்தை கணித்து விட்டாலும் , குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரியா என்றும் யோசிக்க வைக்கிறது.குழந்தை தாயின் வயிற்றிலும் உயிரோடுதான் இருக்கிறது. ஒரு உயிர் உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரி. ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.ஆக ஆணும் பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொன்னால் சரி.அது இல்லாமல் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது என்பது சரியான முறை அல்ல என்றே தோன்றுகிறது. ஆக ஜாதகம் பொய் என்பதே என்னுடைய கணிப்பு.




 இதிலும் இன்னொரும் விஷயம் இன்னும் காமெடி ஆகத்தான் இருக்கிறது. ஜாதகம் கணித்து குழந்தைக்கு செவ்வாய் தோஷம் , புதன் தோஷம் என்று சொல்வது. அப்படியே தோஷம் இருக்கிறது என்று சொன்னாலும் , அதற்கு பரிகாரம் செய்தால் சரி ஆகி விடும் என்பது. கோயிலுக்கு சென்று சில சம்பிருதாயங்கள் செய்தால் சரி ஆகி விடும் என்பதும், சில தோஷத்திற்கு இரண்டு கல்யாணம் நடக்கும், அதில் இரண்டாவதுதான் நிலைக்கும் என்றால் முதல் தாலி வாழை மரத்திற்கு கட்டி அதை வெட்டுவது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பரிகாரம் செய்து நாம் யாரை சந்தோஷ படுத்துகிறோம் , யாரை சந்தோஷ படுத்துவதினால் இந்த தோஷம் மறைகிறது. கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். நாம் முட்டாளா அல்லது பரிகாரம் செய்து நாம் சந்தோஷ படுத்துகின்ற அந்த கடவுளா அல்லது கோள்களா ? இந்த தோஷத்தில் உள்ளவர்கள், தோஷம் இல்லாதவர்களோடு இணைந்தால் இருவரில் யாரவது ஒருவர் இறந்து விடுவார் என்றெல்லாம் கேள்வி படுகிறோம். இந்த இணைவது என்பது திருமணம் செய்து இணையும் போதுதான் பலிக்குமா ? ஏனென்றால் எத்தனையோ பேர் விலை மாதர்களிடம் செல்கிறார்கள். அவர்களிடம் செல்லும் போது நாம் தோஷம், ஜாதகம் விசாரித்தா செல்கிறோம் ? அப்படி அவர்களிடம் இந்த தோஷம் இருந்தால் என்ன ஆகும்? அப்போது இதெல்லாம் "பலி"க்காதா ? தோஷம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கண்டிப்பாக ஏமாற்றுவேலைதான்.




 ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு குழந்தை ஒரு வீட்டில் பிறக்கிறது என்றால் ஒரு தோஷம் கண்டிப்பாக வரும்.அதை நான் ஏற்று கொள்கிறேன். அது சந்"தோசம்".