Sunday, August 23, 2009

உங்களுடைய ரத்த பிரிவை அறிந்து கொள்ள போகிறிர்களா --- உஷார்




சமீபத்தில் ரத்த பரிசோதனை செய்த பொழுது ஏற்பட்ட அனுபவம் எனக்கு மற்றும் என்னுடைய நண்பருக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து என்றே கூற வேண்டும்.

மூன்று மாதத்திற்குள் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று நினைத்து சென்னையில் உள்ள பெரிய மருத்துவ நிலையத்திற்கு சென்று பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து அதனுடைய விவரத்தை பார்த்த பொழுது சற்று அதிர்ச்சியாக மற்றும் சந்தேகமாக இருந்தது. என்னுடைய ரத்த பிரிவு A2B +ve (முன்பே தெரியும்). அங்கு அவர்கள் கொடுத்தது AB+ve.

சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்க்காக பரிசோதனை செய்த மருத்துவரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் நாங்கள் இப்படிதான் செய்வோம். 1 அல்லது 2 போன்ற உட்பிரிவுகள் எல்லாம் குறிப்பிடுவதில்லை என்று கூறினார். எண்ணை குறிபிடுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டதிற்கு சரியான பதில் ஒன்றும் அவரிடம் இருந்து வராத காரணத்தினால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு சிறு பரிசோதனை கூடத்திற்கு சென்று ரத்தத்தை கொடுத்தேன். அவர் பார்த்த மாத்திரத்தில் இது B+ve என்று கூறி விட்டார். அதிர்ச்சியோ அதிர்ச்சி (எனக்கும் , என் நண்பருக்கும்).

"சார், நல்ல பார்த்து சொல்லுங்க......ஒன்னும் அவசரம் இல்ல....இப்பதான் இன்னொரு இடத்துல இன்னொரு பிரிவ சொன்னாங்க....நீங்க ஒன்னு சொல்றீங்க.... நல்ல டைம் எடுத்துகோங்க.... அப்புறம் சொல்லுங்க " என்று கூறிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது அவர் விடாபிடியாக உங்களுக்கு இதுதான் B+ve என்று கூறி விட்டார். சந்தேகம் இருந்தால் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி பரிசோதனை செய்த ரத்தம் பதிந்த அந்த கண்ணாடியை என்னிடம் காண்பித்தார்,

" இப்படி பார்க்க தெரிஞ்சா நான் என் உங்கிட்ட வரேன் என்று சொல்லி விட்டு " அங்கிருந்து கிளம்பி விட்டோம். (திரைப்பட சென்சார் பிரிவில் இருந்தாரோ என்னமோ தெரியவில்லை A வை கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்து விட்டார். இதில் எது நடந்தாலும் ஏற்று கொள்ளுங்கள் என்று உணர்த்த விரும்பினாரோ தெரியவில்லை , B+ve என்று கூறி சென்று விட்டார்.)

" என்னதாண்டா நம்முடைய உண்மையான ரத்த பிரிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அன்றே பெரிய நிறுவனம் வைத்துள்ள ஒரு ஆய்வு கூடம் மற்றும் இன்னொரு நிறுவனத்தில் சென்று ஆய்வு செய்த பொழுதுதான் என்னுடைய உண்மையான ரத்த பிரிவையே அறிந்து கொள்ள முடிந்தது. (A2B+ve)".

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்றால் , என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்திற்காக ரத்த கொடுக்க சென்று இருக்கிறார். அவருக்கு பரிசோதனை செய்து விட்டு உங்களுக்கு மஞ்சள்காமாலை உள்ளது என்று சொல்லி விட்டனர். அவருக்கு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இன்னொரு பெரிய நிறுவனத்தில் சென்று பார்த்த பொழுது ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டனராம். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மேலும் ஒரு நிறுவனத்தில் சென்று ரத்தத்தை கொடுத்து விட்டு முடிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மருத்துவத்தில் மிக மிக சாதரணமாக கண்டுபிடிக்க கூடிய ரத்த பிரிவை தெரிந்து கொள்ள இவ்வளவு அவஸ்தை பட வேண்டுமா என்ன? இது பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்த பொழுது மேலோட்டமான பரிசோதனையில் ரத்த பிரிவை அறிந்து கொள்ள முடியும். இன்னும் சில பரிசோதனைகள் செய்யும் பொழுது உட்பிரிவு இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். பல ஆய்வு கூடங்களில் இது போன்ற உட்பிரிவுகள் செய்வதில்லை என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார்.

பணத்திற்காக சில பேர், உங்களுக்கு ரத்தத்தில் அந்த பிரச்சினை உள்ளது, இந்த பிரச்சினை உள்ளது என்று கூறியும் பணத்தை பிடுங்குவதாகவும் கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த சமூகம் திருந்த போவதும் இல்லை.

மனிதனுக்கு மிக முக்கியமான ரத்த பிரிவை தெரிந்து கொள்வதில் இவ்வளவு பிரச்சினை என்றால் என்ன சொல்வதென்று தெரியவில்ல தமிழ்நாடு நிலைமையை...?

ப.பிரதீப்

10 comments:

sandiya said...

u have made a good awarness,execting more from u,


ini yaravuthu blood check up panna povanga...........

Anonymous said...

thanks for sharing the goofup

இராகவன் நைஜிரியா said...

சரியாக சொன்ன லேப் பெயர் மட்டுமாவது போட்டு இருக்கலாமுங்க... அது மற்றவர்களுக்கு உபயோகமா இருக்குமில்லையா..

Pradeep said...

நன்றி சந்தியா
நன்றி சாயதாசன்.

நன்றி ராகவன் சார்.
நிறைய இடத்தில சரியாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கு சரியாக பார்த்த இடம் SRM hospital

alaguraja said...

இதை படிக்கும் பொழுது எனக்கு பயம் கலந்த கோபம் தான் வருகிறது. இல்லாத வியாதியை இருக்கு என்று சொல்லுவது பயமாக இருக்கிறது(உங்கள் நண்பருக்கு மஞ்சள்காமாலை இருக்கிறது என்று கூறியது ). சரியாக அவர்கள் வேலையை செய்யாமல், நீங்கள் கேட்ட பொழுது அவர்கள் செய்த தவறை சரிசெய்யாமல் (மறுபடியும் செக் பண்ணாமல் ) மறுபடியும் அவர்கள் தவறை மறைக்க முயல்வது மிகபெரிய குற்றம்.

உயிரை காப்பாற்றும் தொழிலில் இருப்பவர்களே இப்படி உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தால் நாம் எங்கு போவது ????

இவரகளுக்கு ஏன் ஒரு பாடம் புகட்ட்ற கூடாது ?????

Pradeep said...

நன்றி தம்பி.

/***
இவரகளுக்கு ஏன் ஒரு பாடம் புகட்ட்ற கூடாது ?????
***/

பாடம் புகட்டலாம் என்றுதான் மீண்டும் அவர் கடைக்கு(கடை என்று கூறுவதில் தப்பு இல்லை என்று நினைக்கிறன்) நானும் , நண்பர் விஜயும் சென்றோம். ஆனால் கடைதான் மூடியே கிடக்கிறது.
ஆனால் முதலில் கடையிலிருந்து விவரத்தை வாங்கும் பொழுதே நம்முடைய குட்டி பிரதீப் அவரை மிரட்டி விட்டுதான் வந்தார். ஆக இனிமேல் அந்த கடை அதிபர் ஓரளவு யோசிப்பார் என்று நினைக்கிறன்.

Joe said...

Useful post, keep it up!

Alaguraja said...

உண்மையில் நீங்கள் செய்தது நல்ல செயல். தவறுகள் நடக்கும் பொழுது கண்டிப்பாக தட்டிக்கேட்டால் தான், தவறு செய்பவர்கள் மீண்டும் அந்த தவறை செய்ய யோசிப்பார்கள் மற்றும் செய்ய மாட்டர்கள்.

நல்ல நல்ல விசயங்களை தரும் உங்களுக்கு நன்றிகள் பல !!!

தேவன் said...

உபோயோகமான பதிவு நன்றி நண்பரே.

Pradeep said...

நன்றி ஜோ
நன்றி கேசவன்
நன்றி ராஜா

Post a Comment