Wednesday, November 17, 2010

என்னத்த சொல்றது ?







செட்டியாரா ...... அவன் நல்ல விவிரமாதான் இருப்பான். தேவரா...... அவன் நல்ல வீரமாதான் இருப்பான். நாயக்கனா.......அவன் இப்படி இருப்பான்...இந்த ஜாதி காரன் இப்படி இருப்பான் என்று ஒவ்வொரு இனத்தையும் , ஒவ்வெரு ஜாதியையும் பேசுவதை நீங்கள் நடைமுறை வாழ்கையில் கேட்டு இருக்கலாம். அதாவது ஒரு ஜாதியை வைத்து அல்லது ஒரு இனத்தை வைத்து அவன் எப்படி இருப்பான் என்று யூகித்து விடுகின்றோம், அதற்கு ஒரு பழமொழியையும் வைத்து விடுகின்றோம். உண்மையில் அவன் அப்படி இல்லை என்றாலும் ...நீ இப்படிதான் என்று முடிவே செய்து விடுன்கின்றோம். இது உண்மைதானா?..

செட்டியார் இனத்தில் மட்டும்தான் மக்கள் விவரமாக இருகின்றார்களா.. மத்த இனத்து மக்கள் எல்லாம் ஏமாளிகளா...? ....வீரமானவர்கள் அனைவரும் தேவர் இனத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா....மத்த இனத்து மக்கள் எல்லாம் கோழைகளா? இது ஒரு வகையில் பேச்சுக்காக சொல்வது என்றாலும்...சில பேர் இதை உண்மை என்றே நினைத்து கொண்டு அவர்களிடம் உறவாடுவதுதான் பிரச்சினையே......அவன் ஒரு விஷத்தை சாதாரணமாக கூறி இருந்தாலும் ..இவன் இப்படிதான் கூறி இருப்பான் என்று நாமே ஒரு முடிவு செய்து கொள்வதுதான் வேடிக்கையானது. உண்மையில் எவனுடைய குணத்தையும் , அவன் வளர்ந்த மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை வைத்து யூகிகலாமே தவிர...எவனுடைய குணத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பதே உண்மை.

இதே போலதான் பார்பனியத்தை பற்றி பல பேர் சொல்லி கொண்டு இருப்பதையும் , கூறி கொண்டு இருபதையும் பார்த்திருப்போம். பெரியார் சொல்வது போல் அந்த காலத்தில் சரி .....அவர்கள் பார்பனியத்தை வளர்த்தார்கள். உண்மைதான். ஆனால் இந்த காலத்திலும் அவர்கள் இன்னும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்....அந்த இனத்தில் உள்ள மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு இல்லாமலா இருந்து இருக்கும். அல்லது ஐய்யர் இனத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் இந்து மதத்தையும், ஜாதியையும் வளர்கின்றார்களா .....வேறு இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா.....அவர்கள் எல்லாம் ஜாதியை வளர்கவே இல்லையா....? நமக்கு கீழும் ஒரு ஜாதி இருக்கின்றது என்று இருபவர்கள் அனைவரும் ஜாதியை வளர்த்து கொண்டுதான் இருகின்றார்கள்....இது உண்மைதானே.....அந்த இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் அப்படிதான் இருக்க வேண்டும் என்றால் ....பாரதியார் எப்படி வந்தார் பார்பனர் இனத்திலிருந்து.....பெரியார் எப்படி வந்தார் நாயகர் இனத்தில் இருந்து.......அவர்கள் புரட்சி செய்ய வில்லையா?

இதே போன்றுதான் இஸ்லாமிய இனத்தையே கேவல படுத்துவது என்று ஒரு கூட்டமே இருக்கின்றது...... இன்னமும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலையும் இஸ்லாமியார்களை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.....காரணம் அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள மாட்டார்களாம் .....அவர்களும் சுத்தமாக இருக்க மாட்டார்களாம். .என்னமோ கிறிஸ்தவ , இந்து இனத்தவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் நியமான்வர்கள் என்பதை போல.....இந்து மதத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் இயக்கம் இல்லாமலா இருக்கிறது?




ஆக ஒரு தனி பட்ட மனிதரின் நடவடிகையை வைத்து ஒரு இனத்தையே கூறுவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்படிதான் ஒரு முறை நண்பரிடம்......தீவிரவாதம் என்றால் இஸ்லாமிய இனத்தை குரிபிடுகிரிர்களே. ....அப்துல் கலாம் எந்த இனம் என்று கேட்டதற்கு .....அவர் மட்டும் என்ன அணு குண்டு, ராகேட் என்று ஆயுதம் தயாரிபதற்குதானே தலைவராக இருந்தார் என்றார் ............இந்த பதிலுக்கு அப்புறம்....அவரிடம் என்னத்த பேசுவது ?

என்னத்த சொல்றது ?

2 comments:

பாரதசாரி said...

விடு மாப்ளை, அவனுங்க இப்படித்தான் கப்பித்தனமா பேசிகிட்டே இருப்பாங்க

சிவகுமாரன் said...

\\அவர் மட்டும் என்ன அணு குண்டு, ராகேட் என்று ஆயுதம் தயாரிபதற்குதானே தலைவராக இருந்தார் என்றார் ///........

சில் ஜென்மங்களை திருத்தவே புடியாது சார்.

Post a Comment