Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வி = சமம் இல்லா கல்வி !!!

இப்பொழுது ஆங்காங்கே அனைவராலும் பேசப்படும் , விமர்சிக்க படும் ஒரு செய்தி சமச்சீர் கல்வி. உண்மையில் இது தேவைதானா என்று கேட்கும் பொழுது கண்டிப்பாக தேவையான ஒன்றே. ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தையை கல்வியில் இருந்தும் ஒழிப்பதற்கு முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் முறை கண்டிப்பாக வரவேற்க தக்கதே.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பாட முறையை பயில வேண்டும் என்பது சரியான ஒன்றே. ஆனால் உண்மையில் இந்த முறையை செயல்படுத்துவதால் எந்த அளவு மாற்றம் இங்கு ஏற்படும் என்று யோசித்து பார்த்தால், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட போவது இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.

முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.

இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.

தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.

ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.

எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!

5 comments:

kishore said...

சமச்சீர் கல்வினா என்னானே தெரியாம கத்திக்கிட்டு இருப்பவர்களை ஓங்கி மூஞ்சில அறையுற மாதிரியான பதிவு.. அருமை.. கடைசி வரிகள் நிச்சயம் யோசிக்க பட வேண்டிய ஒன்று..

Anonymous said...

Well said, One of ur best write up. Keep writing..:)

senthilkumar said...

நல்ல பதிவு பிரதீப்......என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்...
கல்வியின் தரம் என்பதை மூன்றாய் பிரித்துகொள்ளலாம்னு நினைக்கிறேன்....ஒன்று கல்விக்கூடங்களின் தரம்,ஆசிரியர்களின் தரம்,கற்பிக்கப்படும் பாடங்களின் தரம்....

கல்விக்கூடங்களின் தரத்திற்காகதான் மெட்ரிக் பள்ளிகளை நாடுகிறோம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை...ஏனென்றால் முக்கால் சதவிகித மெட்ரிக் பள்ளிகள் ஆரம்ப காலத்தில் வீடுகளில் தான் நடத்தினார்கள், விளையாட மைதானம் கூட இருக்காது...

ஆசிரியர்களின் தரம் சரியில்லாததால்தான் நாம் மெட்ரிக் பள்ளிகளை நாடுகிறோம் என்றால் அதுவும் சரிபட்டு வராது...எங்கள் ஊரில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியமாக 800 ரூபாய் வாங்குகிறார்கள்...மேலும் பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் அவர்களுடைய கல்லூரி படிப்பிற்கும் திருமந்த்திர்க்கும் இடைப்பட்ட கால இடைவெளியை நிரப்பும் நோக்கோடு இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

பொதுவாக நாம் தனியார் பள்ளிகளை நாடி செல்வதற்கு முதற்காரணம் ஆங்கிலவழி கல்விமுறை மேல் இருக்கும் நம்பிக்கை....ஆங்கிலவழி கல்வி கற்றால் அந்தகக் குழந்தை ஆங்கிலத்தில் சரளமாக பேசும் என்ற நம்பிக்கை...இது நூற்றுக்கு இருபது சதவிகித பள்ளியில் மட்டுமே சாத்தியம்...மற்ற மெட்ரிக் பள்ளிகளில் இதை எதிர்பார்க்க முடியாது....

இரண்டாவது காரணம், மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றும் பாட திட்டங்கள் முற்றிலும் தரமான வகையில் தயாரிக்கப்பட்டது...

மெட்ரிக் பள்ளிகளால் சொல்லப்படும் இந்த காரணத்தை திருத்தும் பட்சத்தில் சமசீர் கல்வி முறை உருவாக்கபட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன் ... எது எப்படி இருந்தாலும் நமது ஆங்கில மோகத்திற்கு தீனி போடும் வகையில் அரசாங்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு உகந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாத பட்சத்தில் மெட்ரிக் பள்ளிகளின் மீதான மோகம் குறையாது என்று நான் நினைக்கிறேன்....

பாரதசாரி said...
This comment has been removed by the author.
பாரதசாரி said...

அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்,
கல்வியாளர்கள் இதை வணிகமாகப் பார்க்கிறார்கள்.
அவதிப் படுவோர் இதை கவலையோடு கைக்கடிப் பார்க்கும் அவல நிலை வேதைக்குரியது.

Post a Comment