Sunday, November 8, 2009

விடை தெரியாத கேள்விகள்




சில நேரங்களில் நாம் பேசுவது ஒன்றாக இருக்கும், அதையே நாம் செய்வது ஒன்றாக இருக்கும். அது மாதிரியான விசயங்களில் ஒரு சில.

ஆணாதிக்க மனோபாவம் உடையவர்களை பற்றி எடுத்துகொள்வோம்.
- அவர்களிடம் சென்று அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என்று கேட்டால் , அம்மாதான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
- அவர்களுக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருந்தால் , தங்கை மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து இருப்பார்கள்.
- பருவ காலத்தில் , ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தும் இருப்பார்கள் ( அந்த பெண் மதிக்காத போது கூட ).
- அவர்களுக்கு திருமணம் ஆகியது என்றால் , மனைவி சொல்வதை மட்டும் கேட்டு கொண்டி இருப்பார்கள் (மற்றவர்களை மதிக்காமல் ).
- அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்றால் , அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அதன் மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்து இருப்பார்கள் , மகனை விட.
- அரசியலை எடுத்து கொண்டால், ஜெயலலிதா தான் அல்லது சோனியா காந்தி தான் என்று முழக்கம் இடுவார்கள்.

இவ்வளவும் செய்து கொண்டு, ஆண்தான் பெரியவன் ,பெண் அடிமையாகதான் இருக்க வேண்டும் என்று மார்தட்டி கொண்டு இருப்பார்கள். இது மாதிரியான ஆள்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் நடை முறை வாழ்கையில்.

இன்னும் சில பேர் இதற்கு அப்படியே எதிராக, பெண்ணடிமை கூடாது , ஆணாதிக்கம் தவறு என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கே திருமணம் நடக்கிறது என்று எடுத்து கொள்வோம். அவர்களை வீட்டோடு மாப்பிளை என்று கூறினால் , அவர்கள் திருமணம் செய்வார்களா என்று கேட்டால் ....."முடியாது" என்ற ஒரு சொல்தான் பதிலாக இருக்கும்.

அது என்ன......... திருமணத்தின் போது பெண் மட்டும்தான் , அவர்கள் சொந்த பந்தத்தை விட்டு வர வேண்டுமா? இதுவும் ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ , நமக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தானே?

இதற்கு என்னை நானே கேள்வி கேட்டு கொண்டால் , எனக்கும் பதில் சொல்ல தெரியவில்லை???????.

இது மாதிரியான முன்னுக்குபின் முரணான பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.....பதில்தான் தெரியவில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் , Ladies First என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று தான் நினைகிறேன். டாக்டர் ஷாலினி அவர்கள், அவருடைய புத்தகத்தில் கீழே உள்ளவாறு எழுதி இருப்பார். அதை படிக்கும் பொழுது அது உங்களுக்கு புரியும்

"கரு உருவாகும் போது , முதலில் அது பெண்ணாகத்தான் உருவாகுமாம்.. பின்பு க்ரோமோசோம்களின் மாற்றங்களினால் அது ஆணாக மாறும் அல்லது பெண்ணாகவே இருக்கும். ஆக முதலில் உருவாவது பெண் தான். ஆண் அல்ல. அதனால்தான் ஆணுக்கு உபயோகமே இல்லாமல் மார்பகங்கள் இருக்கிறதாம் ".

Monday, October 12, 2009

விபச்சாரன்கள்





விபச்சாரம் - இந்த வார்த்தைக்குரிய அர்த்தத்தை முதன்முதலில் உணர்ந்தது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் மப்பில் இருக்கும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணிடம் திட்டு வாங்கும் போதுதான் . இது நடந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில். மற்றொன்று, நடுத்தர வயது உள்ள ஒரு பெண், ஒரு நடுதரதிற்கும் (தரம் இல்லாத) அதிகமான வயது உள்ள ஒரு ஆணிடம் எதோ பேசி , அவரும் பித்து பிடித்தவர் போல அவள் பின் சென்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்து நானும் என் நண்பனும் ஆர்வ மிகுதியில் அவர்களை பின்தொடர்ந்து , பின்பு அந்த காட்சி ஒரு ஹோடெலின் அறை கதவை சாதியதோடு நின்றது. புத்தர் போதி மரத்தில் ஞானம் பெற்றது போல, எங்களுக்கு ஒரு ஹோடேலில் விபசாரம் பற்றிய ஞானம் பிறந்தது.

பொதுவாக விபசாரம் என்ற வார்த்தை எப்போதும் பெண்களை சுற்றியேதான் வந்து கொண்டிருகிறதே தவிர ஆண்களை பற்றி எப்போதும் ஒரு வார்த்தை கூட வந்ததிலை, கேள்வி பட்டது கூட இல்லை. இவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு என்னதான் பெயர்? இதுவும் ஒரு வகையில் ஆணாதிகத்தின் ஒரு பகுதிதான்.

உதாரணத்திற்கு ,

*) ஒன்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் பெண்ணை திருமணம் செய்யும் ஆணை , நாம் பலவாறு கேலி செய்வதுண்டு( பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே) . " ரெண்டு மச்சினிசியா......ம்ம்ம்ம்ம்...மஜாதான்" .ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஆணுக்குதான். இதுவே இதற்கு அப்படியே உல்டாவாக ஒரு பெண்ணை கற்பனை செய்து பாருங்கள். ஒன்றுக்கும் அதிகமான ஆண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை " ரெண்டு மச்சினனா ....ம்ம்ம்ம்ம்ம்....மஜாதான் " என்று என்றைகாவது சொல்லி இருக்கிறோமா. சொல்லத்தான் முடியுமா.. நீ அவர்களுக்கு தாய் போல என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். அப்படியே சொன்னால் அவள் " விபச்சாரி, நடத்தை கெட்டவள், கள்ள காதல்" என்று பல பெயர்கள். இந்த விசயத்தில் ஆண்களுக்கு பெயர் மன்மதன் , பெண்கள் செய்தால் வேறு பெயர்.

*) குடும்ப தலைவன் , சில வீட்டில் அனைவருக்கும் தெரிந்தே "சின்ன வீடு" வைத்து கொள்ளலாம் . அவனுக்கு எந்த பெயரும் இல்லை.தட்டி கேட்டாலும் ஒன்றும் ஆக போவதும் இல்லை. அவன் ஆண் . குடும்ப தலைவன். ஆனால் இதையே பெண் செய்தால் மேலே சொன்ன அனைத்து பெயர்களும் அவளுக்கு வரும்.

*) பலான படங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும், படத்திற்கு வருபவர்களில் , இளசுகள் அதிகமா அல்லது பெரிசுகள் அதிகமா என்று. ஆண்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு அவர்களுடைய இச்சையை தீர்த்து கொள்ள குறிபிட்ட வயதை தாண்டிய பிறகும். ஆனால் பெண்களுக்கு? (அவர்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆசா பாசங்கள் எல்லாம் ஆண்களுகுதானா? பெண்களுக்கு இல்லையா? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றும் தெரியவில்லை ).

*) கடவுளை கூட நாம் விட்டு வைக்க வில்லை இந்த விசயத்தில். கோகுலத்தில் உள்ள கிருஷ்ணன் ,பல பெண்களிடம் விளையாடுவாராம், குளிக்கும் போது துணிகளை எடுத்து விடுவாராம்.அவருக்கு பெயர் மன்மதன். ஆனால் இது மாதிரி குணாதிசயங்கள் நிறைந்த பெண் கடவுளை பற்றி நான் அறிந்ததில்லை. கடவுளில் கூட ஆணாதிக்கமா? எனக்கு எப்போதோ படித்த ஹைக்கூ தான் நினைவுக்கு வருகிறது.

"கிருஷ்ணன் செய்தால் லீலை.
நாங்கள் செய்தால் ஈவ்- டீசிங்கா ?"

மேலே உள்ள விசயங்களில் உள்ள ஆண்களுக்கு என்ன பெயர் தெரியவில்லை?.

சமீபத்தில் தினமலரில் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே. சில நடிகைகளை விபசாரம் செய்தார்கள் என்று கூறிய பத்திரிகை , அவர்களிடம் சென்றவர்களை பற்றி எதுவும் வெளியிட வில்லை. அவர்களுக்கு பெயரும் இல்லை. பொதுவாக சினிமா துறையில் உள்ள பெண்களை பற்றி அனைவரும் அறிந்ததே. ஒரு பெண் நடிகையாக வர வேண்டும் என்றால் ,இன்னும் அந்த பெண் யாருடைய வாரிசும் இல்லை என்றால் , அவள் எத்தனை பேருடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே. முதல் கொலை செய்யும் போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். போக போக எல்லாம் சரி ஆகி விடும். அது போலதான் இதுவும். தொழில் என்று ஆன பிறகு , அதுவும் பழகிய பிறகு அந்த தொழிலை செய்வதில் (விபசாரதைதான்) எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களை இந்த மாதிரி ஆக்கியதே ஆண்கள் (அனைவரும் இல்லை) தான். அவர்கள் அழைத்து செய்யும் பொழுது விபசாரம் இல்லை. ஆனால் அதுவே அந்த பெண்கள் தனியாக செய்தால் மட்டும் விபச்சாரமா? புரிய வில்லை.

ரஜினி ஒரு பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்பு , " மது , மாது இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று கூறியதாக கேள்வி பட்டிருக்கிறேன். இதை ஒரு ஆண் கூறலாம் . இதை பெண் கூறினால், விபச்சாரமா?

சினிமாவில் உள்ள சில பெண்களின் படத்தை மட்டும் பத்திரிகையில் போட்டு இருந்தார்கள். ஆண்களை பற்றி போடுவது என்றால் , 75 % ஆண்களின் போட்டோவை போட வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ஆக . விபசாரம் என்பதில் எப்போதும் பெண்களை பற்றியே குறை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. ஆண்கள் இந்த பெண்களிடம் சென்று படுப்பதை குறைத்தால் , இந்த தொழில் படுத்து போகும் என்பது உண்மை.

ப.பிரதீப்



Thursday, September 24, 2009

படித்ததில் ரசித்தது

வெற்றி ---- இந்த வார்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.

:)))))


"Success is just like being pregnant: everybody congratulates you, but nobody knows how many times you were fucked." - Gurnicht Von Nicht (1946-).

Sunday, September 13, 2009

நானும் ஒருவன்







கீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.

ஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

கல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண்டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.

தென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.

அழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

ஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.

எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.

கடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.
நமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.

ப.பிரதீப்

Sunday, August 23, 2009

உங்களுடைய ரத்த பிரிவை அறிந்து கொள்ள போகிறிர்களா --- உஷார்




சமீபத்தில் ரத்த பரிசோதனை செய்த பொழுது ஏற்பட்ட அனுபவம் எனக்கு மற்றும் என்னுடைய நண்பருக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து என்றே கூற வேண்டும்.

மூன்று மாதத்திற்குள் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று நினைத்து சென்னையில் உள்ள பெரிய மருத்துவ நிலையத்திற்கு சென்று பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து அதனுடைய விவரத்தை பார்த்த பொழுது சற்று அதிர்ச்சியாக மற்றும் சந்தேகமாக இருந்தது. என்னுடைய ரத்த பிரிவு A2B +ve (முன்பே தெரியும்). அங்கு அவர்கள் கொடுத்தது AB+ve.

சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்க்காக பரிசோதனை செய்த மருத்துவரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் நாங்கள் இப்படிதான் செய்வோம். 1 அல்லது 2 போன்ற உட்பிரிவுகள் எல்லாம் குறிப்பிடுவதில்லை என்று கூறினார். எண்ணை குறிபிடுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டதிற்கு சரியான பதில் ஒன்றும் அவரிடம் இருந்து வராத காரணத்தினால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு சிறு பரிசோதனை கூடத்திற்கு சென்று ரத்தத்தை கொடுத்தேன். அவர் பார்த்த மாத்திரத்தில் இது B+ve என்று கூறி விட்டார். அதிர்ச்சியோ அதிர்ச்சி (எனக்கும் , என் நண்பருக்கும்).

"சார், நல்ல பார்த்து சொல்லுங்க......ஒன்னும் அவசரம் இல்ல....இப்பதான் இன்னொரு இடத்துல இன்னொரு பிரிவ சொன்னாங்க....நீங்க ஒன்னு சொல்றீங்க.... நல்ல டைம் எடுத்துகோங்க.... அப்புறம் சொல்லுங்க " என்று கூறிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது அவர் விடாபிடியாக உங்களுக்கு இதுதான் B+ve என்று கூறி விட்டார். சந்தேகம் இருந்தால் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி பரிசோதனை செய்த ரத்தம் பதிந்த அந்த கண்ணாடியை என்னிடம் காண்பித்தார்,

" இப்படி பார்க்க தெரிஞ்சா நான் என் உங்கிட்ட வரேன் என்று சொல்லி விட்டு " அங்கிருந்து கிளம்பி விட்டோம். (திரைப்பட சென்சார் பிரிவில் இருந்தாரோ என்னமோ தெரியவில்லை A வை கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்து விட்டார். இதில் எது நடந்தாலும் ஏற்று கொள்ளுங்கள் என்று உணர்த்த விரும்பினாரோ தெரியவில்லை , B+ve என்று கூறி சென்று விட்டார்.)

" என்னதாண்டா நம்முடைய உண்மையான ரத்த பிரிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அன்றே பெரிய நிறுவனம் வைத்துள்ள ஒரு ஆய்வு கூடம் மற்றும் இன்னொரு நிறுவனத்தில் சென்று ஆய்வு செய்த பொழுதுதான் என்னுடைய உண்மையான ரத்த பிரிவையே அறிந்து கொள்ள முடிந்தது. (A2B+ve)".

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்றால் , என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்திற்காக ரத்த கொடுக்க சென்று இருக்கிறார். அவருக்கு பரிசோதனை செய்து விட்டு உங்களுக்கு மஞ்சள்காமாலை உள்ளது என்று சொல்லி விட்டனர். அவருக்கு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இன்னொரு பெரிய நிறுவனத்தில் சென்று பார்த்த பொழுது ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டனராம். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மேலும் ஒரு நிறுவனத்தில் சென்று ரத்தத்தை கொடுத்து விட்டு முடிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மருத்துவத்தில் மிக மிக சாதரணமாக கண்டுபிடிக்க கூடிய ரத்த பிரிவை தெரிந்து கொள்ள இவ்வளவு அவஸ்தை பட வேண்டுமா என்ன? இது பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்த பொழுது மேலோட்டமான பரிசோதனையில் ரத்த பிரிவை அறிந்து கொள்ள முடியும். இன்னும் சில பரிசோதனைகள் செய்யும் பொழுது உட்பிரிவு இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். பல ஆய்வு கூடங்களில் இது போன்ற உட்பிரிவுகள் செய்வதில்லை என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார்.

பணத்திற்காக சில பேர், உங்களுக்கு ரத்தத்தில் அந்த பிரச்சினை உள்ளது, இந்த பிரச்சினை உள்ளது என்று கூறியும் பணத்தை பிடுங்குவதாகவும் கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த சமூகம் திருந்த போவதும் இல்லை.

மனிதனுக்கு மிக முக்கியமான ரத்த பிரிவை தெரிந்து கொள்வதில் இவ்வளவு பிரச்சினை என்றால் என்ன சொல்வதென்று தெரியவில்ல தமிழ்நாடு நிலைமையை...?

ப.பிரதீப்

Sunday, August 2, 2009

அறிவு ஜீவிகளின் ஆடி மாதம்



ஆடி மாதம் - இந்த மாதத்தை பற்றி பொதுவாக சில கருத்துகள் அந்த காலத்திலிருந்து நிலவி கொண்டுதான் இருக்கின்றன. ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதுதான் அது.

இந்த கருத்து தேவைதானா? என்று ஆராயும் பொழுது தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது எனக்கு. அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னார்கள் என்றால், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் , சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சொல்வது ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இந்த காலத்தில் அது சரிதானா என்று சொன்னால் , வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அந்த காலத்தில் , காற்றாடி , குளிர் சாதன பெட்டி போன்ற வாய்புகள் இல்லை . ஆகையால் அது சரி. ஆனால் இந்த காலத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. நம்மை எந்த அளவிற்கு, நம்மை கூலாக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் கூடி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்றும் இதை காரணமாக கூறி கொண்டு திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த கூத்து என்றால் , ஆந்திராவிம் ஒரு பகுதியில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று மாமியார்கள் இருவரும் பார்த்து கொள்ள கூடாதாம், அது மாதிரியே மருமகளும் , மாமியாரும் பார்த்து கொள்ள கூடாதாம். நம்பகமான நண்பர் ஒருவரிடமிருந்து வந்த செய்தி அது. என்னவென்று சொல்வதென்று தெரிய வில்லை இந்த கூத்தை.

திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை ஆடி மாதத்தில்.
உதாரணமாக , புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ண கூடாது போன்றெல்லாம் சொல்லி கொண்டு இன்னும் நடை முறை படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும் , ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.
அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

ஆனால் நம்முடைய ஆள்கள் மிகவும் தெளிவானர்கள் , ஆடி மாதத்தில் ஒன்றும் விளங்காது என்று சொல்லி வைத்து ஊரை ஏமாற்றி , ஆடி தள்ளுபடியில் வாங்கும் பொருளை மட்டும் வலுவாக வாங்கி கொள்கிறார்கள். அது மட்டும் விளங்குமா என்று தெரியவில்லை.

இப்படி மக்கள் இருபது ஒரு வகையில் நல்லதாகவே பட்டது. நான் ஒரு வீடு பார்க்க வேண்டும் வாடகைக்கு என்று நினைத்து தேர்ந்து எடுத்த மாதம் இந்த மாதம்தான். காலியான வீட்டில் யாரும் குடியேற வில்லை. ஆகையால் பொறுமையாக முடிவு செய்து வீட்டை தேர்ந்து எடுத்தேன். எந்த வித போட்டியும் இல்லாமல்.

ஆடி மாதம் வாழ்க. அறியாமையில் வாழும் மக்கள் வாழ்க.

எல்லா மாதத்திற்கும் இது போன்று பெரியவர்கள் சொல்லி வைத்து இருந்தால் நல்லதாக இருக்குமோ என்று இப்போது உரைக்கிறது எனக்கு.

ப.பிரதீப்

Sunday, April 26, 2009

1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.



சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.



அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).



பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.



பின்பு நடந்ததுதான் காமெடியே.



அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)



இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?



இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.



அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.



நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.


*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.


*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.


*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter


*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.


*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.



இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.



ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.




ப.பிரதீப்