Monday, November 7, 2011

கடுப்பேதுராங்க மை லார்ட் !!!

7 ம் அறிவு படத்த பார்த்துட்டு பல பேரு பல கமெண்ட்ஸ் குடுத்துகிடுதான் இருக்காங்க. சில பேரு படம் சூப்பர் அப்படினும், சில பேரு படம் மொக்கனும், இன்னும் சில பேரு தமிழனு நினைக்கும் போது பெருமையாவும் இருக்குனு சொல்றாங்க. முருகதாஸ் இந்த படத்த பத்தி சொல்லும் போது, இந்த படத்த பார்த்துட்டு நீங்க தமிழனு நினைக்கும் போது ஒரு திமிரு இருக்கும்னு சொல்றாரு. ஆனால் எனக்கு என்ன தோனுதுனா, ஏன் இந்த இன வெறி? ஏன் இந்த மொழி வெறி?

மொழி ங்கிறது ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். தமிழ் மொழி பழமையானது, வரலாறு மிக்கது.சரி ஒத்துகிறேன்.ஆனால் அத சொல்லிகிட்டே இருக்குறதுனால, அந்த மொழி பேசுற நான் தமிழன் அப்படின்னு சொல்லிகிரதுல என்ன வந்துற போதுன்னு எனக்கு தெரியல. இதுல என்ன திமிரு இருக்கு இல்ல இதுல என்ன பெருமிதம் இருக்கு. ஜஸ்ட் அது ஒரு மொழி அவ்வளவுதான. தமிழ் மொழி பேசுரவந்தான் பெருமையான்வனு நினச்சா...பிறவியிலேயே வாய் பேச முடியாதவங்க, இல்ல பிறவியிலேயே காது கேட்காதவங்க,இல்ல மொழிந்கிரதையே உணர முடியாத நிலையில உள்ளவங்கள எப்படி நீங்க பார்குறிங்க? அவங்க வாழ்வதற்கு உரிமையே இல்லாதவங்களா? அவங்களுக்கு பாவம் மொழிந்கிறதே என்னனு தெரியாது....அவங்கல என்ன பண்ணலாம்? அவங்களுக்கு எல்லாம் திமிரே இருக்க கூடாதா?

எனக்கு என்னமோ இப்படிதான் எல்லாமே தொடர்கிரதொனு தோணுது...நீங்க மொழில தமிழ் மொழிதான் உயர்ந்தது அப்படின்னு சொல்றிங்க....உடனே இன்னொருத்தன் என்ன பண்ணுவான் அப்படினா ஜாதில ஏன் ஜாதி தான் உயர்ந்தது னு சொல்லுவான்..இன்னொருத்தன் மதத்துல என் மதந்தான் உயர்ந்ததுனு சொல்லுவான். அப்புறம் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.இது ஒரு பொழப்பா ?

சரி...அப்படியே தமிழ் , தமிழ் னு சொல்றவங்கனாசும் உண்மையா இருகிங்களா ..அதுவும் இல்ல....ஈழ தமிழர்களுக்கு நம்ம என்ன பண்ணிட்டோம்....அப்பப்ப சவுண்ட் கொடுப்போம்...சூடு ஆரிருசுனா மூடிகிட்டு இருப்போம்..இதுதான நடக்குது.....வேற எதாச்சும் இத மீறி நடந்துருச்சா....இல்ல இந்த படத்த எடுத்த முருகதாஸ் தான் உண்மையா இருக்காரா......தமிழ் படத்துல போதி தர்மர் தமிழர்னு சொல்றிங்க.....தெலுகு ல அவர வேற மாதிரி ப்ராஜெக்ட் பன்றிங்கனு சொல்றாங்க..இது தேவையா.....? தமிழ், தமிழ் னு சொல்றவரு என் ஹிந்தி ல போய் படம் எடுக்குரிங்க? தமிழ் மொழிலேயே எடுக்க வேண்டியதுதான....போதி தர்மர வச்சி , நாம தமிழர்னு பெரும படுறதா சொல்றிங்க....ஆனால் அந்த போதி தர்மர் தமிழருக்கு ஒன்னும் பண்ண மாதிரி தெரியல....அவர் என்னடானா சீனா நாட்டுக்கு போய் அங்க போய் எல்லாம் கத்து குடுத்துகிட்டு இருகாரு. எனக்கு என்னமோ அவர் கரெக்டாதான் இருக்குற மாதிரி தோணுது...நம்மதான் அவர தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்.

இதுலந்த ஒன்னும் மட்டும் புரியுது....தமிழரா நடித்துரிகுற சூர்யா வ சாகடிகுனும்னா விசத்த கலந்து கொடுத்தா காலி பண்ணிரலாம் போல...நானும் "நந்தா" படத்துழந்து பார்க்குறேன்...மனுசன இப்படியே சாகடிசிகிடு இருக்காங்க.

ஆக, இது மாதிரி தயவு செஞ்சு மக்களை உசுபேத்துரத நிறுத்துங்க சார்......நீங்க தூக்கி வச்சி ஆடுற தமிழ் இனத்துல முட்டாள் தனமா முடிவு எடுக்குற சில மக்கள் இருக்குறாங்க ..முத்து குமார் மாதிரி, சமீப காலத்துல தீகுளிச்சி இறந்து போன அந்த பொண்ணு மாதிரி....தேவ இல்லாம சில பேர நீங்களே உருவாகாதிங்க....


இது மாதிரி இந்தியா ல இன்னொரு கும்பல் செம்மைய கடுபேதிகிட்டு இருக்காங்க....யாருன்னு கேட்குரிங்கலா....அவர பத்தி ஒரு tag line குடுத்தா புரிஞ்சிரும்னு நினைக்கிறன்....."அவர் கொஞ்ச நாள் முன்னாடி சாப்பிடாம பேசிக்கிட்டு இருந்தாரு.....இப்ப பேசாம சாப்பிட்டுகிட்டு இருகாரு..." அவரேதான் அன்னா ஹசாரே தான்.மனுஷன் ஏதாவது ஒரு விரதம் எடுக்காம இருக்க மாட்டாரு போல..... இவரும், இவர் கும்பலுல இருக்குறவங்க சேட்ட தாங்க முடியல. இவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு வேற. ஒரு 5 பேர் சேந்துகிட்டு உண்ணாவிரதம் இருப்போம்னு அரசாங்கத்த மிரட்டுவான்கலாம், அதனால இவங்க சொல்றத கேட்கனுமா....என்ன நடக்குது இங்க....

ஊழல ஒழிக்கணும்னு சொல்றது எல்லாம் கரெக்டுதான்....ஆனால் அதற்கு ஒரு முறை னு ஒன்னு இருக்குல.....முதல ஒரு பொது நல வழக்கு போடுங்க...இது மாதிரி ஒரு சட்ட மசோதா கொண்டு வரணும்னு.....ஒத்துகலனா ..அதுக்கப்புறம் நீங்க உண்ணாவிரதம் இருங்க.....எதுவுமே பண்ண மாட்டிங்க.....ஆனால் நீங்க சொல்றத எல்லாம் கேட்கனும்னா எப்படி ? தமிழ் நாடுலயும்தான் சமசீர் கல்வி கொண்டு வர கூடாதுன்னு சொன்னங்க....இங்க உள்ளவங்க எல்லாம் உண்ணா விரதமா இருந்தாங்க?....பொது நல வழக்கு போட்டாங்க...அவங்களுக்கு தீர்ப்பு கிடச்சது....இப்ப சமசீர் கல்வி தமிழ் நாட்டுல இருக்கு...இது மாதிரி இந்த கும்பல் எதுவுமே பண்ணல.....ஆனால் இவங்க சொல்றத கேட்கணும்.....அது எப்படி?

பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு.....எந்த ஊழல் சட்டம் கொண்டு வந்து ராஜா, கனிமொழி எல்லாம் சிறையில இருக்காங்கனு? ஆக சட்டம் எல்லாம் கரெக்டான் இருக்கு.....அரசாங்கம்தான் சரியா இருக்கனும்.....அத மாத்துறதுக்கு நீங்க பிரசாரம் பண்ணுங்க....இல்ல நீங்களே நல்ல ஆளுங்கள தேர்வு பண்ணி தேர்தலுல நில்லுங்க....அத விட்டு நீங்க கடந்த தேர்தலுல பிஜேபி ஓட்டு போடுங்கனு சொல்றது சரியா படலையே சார்? பிஜேபி என்ன அவ்வளவு நல்ல கட்சியா? மத வெறி பிடிச்சி பாபர் மசூதிய இடிகிரதுகு ஆழ கூட்டிட்டு போய் அத இடிச்சி, அத தலைமை தாங்கி நடத்திய அத்வானிக்கு ஆதரவு தர சொல்றது எந்த விதத்துல நியாயம் அப்படின்னு தெரியல ?

சரி அந்த கும்பலுல ஒருத்தரா இருக்குற....கிரண் பே(கே)டி மேல இப்ப சுமத்துன குற்றத பார்த்தா இன்னும் கேவலமா இருக்கு....விமான சீட்டுல கொடுத்த காசுல காச அடிச்சிட்டு....அத நான் use பண்ணல...என்னோட டிரஸ்ட் க்கு தான் use பண்ணேன்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்..? வடிவேலு சொன்னதுதான் நியாபகம் வருது....."ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" அது மாதிரி "மத்தவங்க பண்ணா ஊழல்...நீங்க பண்ணுனா பொது நலமா?" என்ன லாஜிக் இதுன்னு புரியல.....இந்த கும்பலுக்கு இந்தியா முழுவதும் எப்படி ஆதரவு தந்தாங்கனுதான் புரியல.....ஆனால் அந்த விசயத்துல அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். ..

2 comments:

Anonymous said...

sariyaga sonnirgal

Unknown said...

கண்டிப்பாக தங்களுக்கு தமிழின விரோதி பட்டம் கொடுக்கப் போறாங்க! எதிர் கருத்தைச் சொல்றவன் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் எனும் முட்டாள்கள் உலகம் இது!

நல்லவன்னு பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும்! அல்லது சாகனும்!

//அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். .. //

முகமூடிகள் அணிந்து நாடகமாடினால் கிழிய வெகுகாலம் ஆகாது!

Post a Comment